கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரவி பாளையம் பொள்ளாச்சியிலிருந்து வடமேற்கில் நடுப்புன்னி செல்லும் வழியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[1]. 1958க்கு முன்பாக இருந்த செழிப்பான சமீன்களில் இதுவும் ஒன்று. இந்த சமீனின் ஆட்சியதிகாரம் பெற்றவர்கள் பூலுவ (வேட்டுவ)க் கவுண்டர் இனத்தவர்கள். இதன் கடைசி அரசர் வெற்றி வேல் கோப்பன்ன மன்றாடியார். இவர் 1996ஆம் ஆண்டு காலமானார். இவருக்குப் பின் இந்த சமீனுக்கு வாரிசு இல்லாத நிலையில் இராணியார் மட்டும் இந்த அரண்மனையில் வசித்து வருகிறார்.