புதுவை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மிகப்பெரிய முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்!

மிகப்பெரிய சுமையையும் காலத்தையும் வலியையும் எடுத்துக்கொள்ளுகின்ற வேலைகளை நாம் அப்படித்தானே சொல்வோம்!

ஆம் என்றால் அப்பொழுது புதுவை அருங்காட்சியகம் என்பது மிகப்பெரிய முயற்சிதான்.


புதுவை அருங்காட்சியகம்:-

புதுவை அருங்காட்சியகம் 24 பிரிவுகளுடன் அமையவுள்ள பன்னாட்டுத் தரத்தினில் உருவாகப்போகும் அருங்காட்சியகம்.

ஒட்டுமொத்த புலம்பெயர் புதுச்சேரி மக்களுக்கான மிகச் சிறந்த முன்னெடுப்பு ஆகும்.

தற்பொழுது பத்து பிரிவுகளுடன் செயல்பட்டுவரும் இந்த அருங்காட்சியகம் தேசிய மரபு அறக்கட்டளை (NATIONAL HERITAGE TRUST) என்ற பதிவு பெற்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.பலதுறை சார்ந்த அறிவுச் செய்திகள் இவ்வருங்காட்சியகத்தில் கிடைக்கப் பெறுகின்றன.எதிர்காலங்களில் புதுச்சேரி மக்களுக்கான மிகச்சிறந்த அறிவுத் தளமாக புதுவை அருங்காட்சியகம் அமையும்.


புதுவை அருங்காட்சியகம் (MUSÉE DU POUDOUVAÏE - PUDHUVAI MUSEUM)

புதுவை அருங்காட்சியகத் திறப்பு நிகழ்வில் நீதியரசருடன் அருங்காட்சியக நிறுவனர்
பாரதிதாசன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்களுடன் புதுவை அருங்காட்சியக நிறுவனர்

புதுவை அருங்காட்சியகம் என்பது புதுச்சேரியில் இயங்கிவருகின்ற அரசுசாரா அருங்காட்சியகம் ( MUSEUM) ஆகும்.

புதுச்சேரியின் புதலியல் பூங்காவை (BOTANICAL GARDEN) அருகமைந்துள்ள இவ்வருங்காட்சியகம் புதுச்சேரியின் அலங்கத்துக்குட்பட்ட நகர்ப்பகுதியில் உள்ள வ.உ.சி வீதியில் இயங்கி வருகின்றது. 2018 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8 -ஆம் நாள் இந்த அருங்காட்சியகம் ஓய்வுபெற்ற நீதியரசர் செவாலியே முனைவர் தாவீது அன்னுசாமி அவர்களால் திறந்துவைக்கப் பட்டது. தேசிய மரபு அறக்கட்டளையின்(NATIONAL HERITAGE TRUST) உதவியுடன் இயங்கி வருகின்ற இந்த அருங்காட்சியகத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்து பயன்பெறுகின்றனர்.

பல பிரிவுகளை உள்ளடக்கி தேசிய அளவில் உருவாகிவருகின்ற இவ்வருங்காட்சியகம் தொடக்க நிலையில் பல பன்னாட்டுக் கண்காட்சிகளையும் நடத்தியுள்ளது.பல பெரிய அறிஞர்கள் ,தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலரால் பாராட்டப்பட்டுவரும் இந்த அருங்காட்சியகம் எதிர்காலத்தில் ஒரு தேசிய அருங்காட்சியக நிலையினை அடைந்திட உழைத்துவருகின்றது.

ஒரு கனவு - பெரு உழைப்பு - அருஞ்செயல்

புதுச்சேரியில் இருந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற மக்களின் வரலாற்றினை உள்ளுணர்வுடன் எண்ணிய கனவுடன் 2012 - ஆம் ஆண்டுமுதலாக கடுமையாக உழைத்துவருகின்ற இவ்வருங்காட்சியக முயற்சி எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டுப் பார்வைக்குள்ளாகும் என்பதில் வியப்பில்லை என்றாலும் இதற்கான கனவு - உழைப்பு - செயல் ஆகியவை இங்கு குறிப்பிடவேண்டியது.

அருங்காட்சியக உருவாக்கக் களிப்பில் நீதியரசர்


புதுவை அருங்காட்சியகப் பிரிவுகள்


1.நைன் சிங் இராவத் படமப் பிரிவு - NAIN SINGH RAWAT CARTOGRAPHY SECTION

ஆயிரக்கணக்கான படமங்களைச்(MAPS) சேகரித்து வைத்திருக்கும் இக்காட்சியகம் நைன் சிங் இராவத் என்ற இந்தியப் படம அறிஞரின் பெயரில் அழைக்கப்படுகின்றது. தற்பொழுது தெரிவு செய்து நூறு படமங்களை மட்டும் காட்சிப்படுத்தியுள்ளது இப்பிரிவு. நூற்றாண்டைக் கடந்த படமங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இக்காட்சியகத்தில் பிரான்சு தேச படமங்கள்(MAPS OF FRANCE), பிரஞ்சு மொழிப் படமங்கள்(FRENCH MAPS), அரசியல் படமங்கள்(POLITICAL MAPS), இயற்பியல் படமங்கள்(PHYSICAL MAPS,) இடக்கிடப்பியல் படமங்கள்(TOPOGRAPHIC MAPS), காலநிலைப் படமங்கள் (CLIMATIC MAPS), பொருளியல் அல்லது வளமைப் படமங்கள் (ECONOMIC OR RESOURCE MAPS), புள்ளிவிளத்தப் படமங்கள் (STATISTICAL MAP), இருப்புப் பாதைப் படமங்கள் (RAILWAY MAPS), சாலைப் படமங்கள் (ROAD MAPS) மற்றும் பல சிறப்புப் படமங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெயர்ப்பலகை

2.நிக்கோலசு தெ பெர் படமகம் - NICOLAS DE FER MAP LIBRARY

பல நூற்றுக்கணக்கான புதிய படமங்களையும் பழமையான அரிய பல நூற்றுக்கணக்கான படமங்களையும் வரிசைப்படுத்தி தொகுத்து வைக்கப்பட்டுள்ள இப்படமகம், நிக்கோலசு தெ பெர் என்ற பிரான்சு தேச படம அறிஞரின் பெயரில் அழைக்கப்படுகின்றது. முதன்முதலில் புதுச்சேரியின் நகரப் படமத்தினை உருவாக்கிய முதல் பிரஞ்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.


3.செவாலியே சோ. முருகேசன் சிறப்பு நூலகப் பிரிவு  - CHEVALIER S.MOUROUGESAIN SPECIAL LIBRARYஅட்லசு(ATLAS) எனப்படுகின்ற படமப்புத்தகங்களை நூற்றுக்கணக்கான அளவில் தொகுத்து வைத்திருக்கின்ற இச்சிறப்பு நூலகப்பிரிவு புதுவை அருங்காட்சியகம் உருவாக வேண்டும் என்ற பெரிய விருப்பமுடைய புதுச்சேரியின் புகழ் மிக்க கல்வியாளரும் அறிஞருமான செவாலியே முனைவர் சோ. முருகேசன் என்பவரின் பெயரில் இயங்குகின்றது.

4.வான் மீன் காசகப் (நாணயவியல்) பிரிவு - van MEEN NUMISMATICS SECTION) காசகப் (நாணயவியல்) பிரிவில் 1,000 க்கும் மேற்பட்ட நாணயங்கள் உள்ளன.பல நாடுகளின் நாணயங்கள் அந்நாடுகளின் குறிப்புகளுடனள்ளன.பழங்காசுகள் பலவும் இப்பிரிவில்  உள்ளன. காசுகள் பற்றிய ஏராளமான .


5.கப்ரியேல் (இ)ழுவோ துய்ப்ரேய் அஞ்சல் பிரிவு - GABRIEL JOUVEAU DUBREUIL PHILATELY SECTION வரலாற்றுத் தளமான அரிக்கமேட்டின் அகழ்வாய்வுக்கு முதன்மைக் காரணமான ழுவோ துய்ப்ரேய் அவர்களின் பெயரில் அஞ்சல் பிரிவு இயங்குகின்றது.

இவர் புதுச்சேரியின் வரலாற்றை உலகிற்கு உணர்த்தியவர்.

அஞ்சல் பிரிவில்  5,000 - கற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் உள்ளன. மேலும் அஞ்சல் அட்டைகள், அஞ்சல் கடிதங்கள் முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் அஞ்சல் தலைகள் ஆகியவை உள்ளன.அவரின்‌ 75 - ஆம்‌ நினைவு ஆண்டில் அவர்‌ உருவம் பொதிந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


6. ஆனந்தரங்கர் ஆவண நூலகப் பிரிவு - ANANDHA RANGAR ARCHIVE LIBRARY SECTION சென்னை பெரம்பூரில் பிறந்த இவர் புதுவைக்கு ஆற்றியத் தொண்டு உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ஆவணமான ஆனந்தரங்கரின் நாட்குறிப்பேடுகளை புதுச்சேரிக்கும் இந்தியாவுக்கும் அளித்துள்ளார். இந்த ஆவணப்பிரிவில் இருநூறாண்டுகள் முந்தைய புத்தகங்கள் தொகுப்பு மற்றும் 100 ஆண்டுகளைக் கடந்த மேலும் பல அரிய ஆவண புத்தகங்கள் இப்பிரிவில் உள்ளது.


7.அபே துய்புவா ஒளிப்படமகம் - ABBÉ DUBOIS PHOTO SECTION இந்திய மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை ஒளிப்படம் மூலம் காட்சிப்படுத்திடுகின்றது இப்பிரிவு. அபே துய்புவா என்ற மக்களையும் பண்பாட்டு ஆவண முயற்சியாளர் ஒருவரது பெயரிலேயே புதுவை அருங்காட்சியக ஒளிப்பட பிரிவு இயங்குகின்றது. இப்பிரிவில் 1000 - க்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள் , எதிர்மங்கள் ஆகியவை இருக்கின்றன.


8. (இ)லூயி சவேனியன் துய்புய் பொது நூலகப் பிரிவு - LOUIS SAVINIEN DUPUIS GENERAL LIBRARY SECTION

புதுச்சேரிக்கு வருகைத் தந்த பல பாதிரிமார்களில் லூயிசு சவேனியன் துய்புய் குறிப்பிடத்தக்கவர் ஏனெனில் இவர் புதுச்சேரியில் பெண்களுக்கான கல்வி கூடத்தினை முதன்முதலில் திறந்து பெண்களின் கல்விக்கு வித்திட்டவர்.இவரின் பெயரில் 2,000 - க்கும் மேற்பட்ட  பல்துறை சார்ந்த நூல்கள் இப்பிரிவில் உள்ளது.


9. ஞானு தியாகு ஆய்வு நூலகப் பிரிவு - GNANOU DIAGOU RESEARCH LIBRARY SECTION புதுச்சேரியின் மிகச்சிறந்த  வழக்கறிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர் ஞானு தியாகு அவர்கள்.

திருக்குறள், நாலடியாரை ஆகியவற்றை பிரஞ்சு மொழியில் மொழிப்பெயர்த்த முதல் தமிழர் இவரே.

புதுவை அருங்காட்சியகத்தில்  இவரின் பெயரில் ஆய்வு நூலகப் பிரிவு உள்ளது. இப்பிரிவில் பல ஆய்வு நூல்கள் உள்ளன.


10. காந்தி 150 நினைவுப் பிரிவு - GANDHI 150 MEMORIAL SECTION தேசிய மரபு அறக்கட்டளை முன்னெடுத்த காந்தியின் 150 பிறந்த நாள் நூற்றாண்டை மிகவும் செப்பமாக 15 கண்காட்சிகளுடன் ஆவணக்குறுவட்டு ஒன்றினை புதுவை, மதுரை, கன்னியாக்குமரி என்ற மூன்று ஊர்களில் வெளியிட்டுச் சிறப்பித்து. புதுவை அருங்காட்சியகம் காந்தி 150 நினைவு பிரிவை தொடங்கி காந்தியின் சிறு அகவைப் புகைப்படங்கள், காந்தி தன்வரலாறு , காந்தியடிகளைப் பற்றி பல அறிஞர்கள் எழுதிய நூல்கள், காந்தி தலைவர்களுக்கு  எழுதிய கடிதங்கள்,  அவர் பயன்படுத்திய பொருட்கள் படங்கள், காந்தியின் இறுதி நேரம் ஆகியவை காட்சிக்கு இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

புதுவை அருங்காட்சியகத்தில் செவாலியே முனைவர் சோ.முருகேசன்

தொடர்புக்கு

PUDHUVAI MUSEUM

70 - V.O.C STREET,

PONDICHERRY - 605001,INDIA.

pudhuvaimuseum@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_அருங்காட்சியகம்&oldid=3891277" இலிருந்து மீள்விக்கப்பட்டது