பிசப் ஈபர் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசப் ஈபர் மேல்நிலைப்பள்ளி என்பது திருச்சிராப்பள்ளி மாநகரில், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் வழிக் கல்வியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், ஆங்கில வழிக் கல்விக்காகத் தனியாக ஆங்கில வழிக் கல்விப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளி கி.பி 1762 தொடங்கியது.

விடுதி[தொகு]

வெளியூர் மாணவர்கள் பள்ளியில் தங்கிப் படிப்பதற்காகப் பள்ளி வளாகத்திலேயே மாணவர் விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

படத் தொகுப்புகள்[தொகு]