பழம்பொரி
Jump to navigation
Jump to search
கேரளாவின் நாட்டுப்புற பணியாரங்களில் ஒன்று பழம்பொரி (ஆங்கிலம்:Plantain Fritters). கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இதற்கு ஏத்தக்காப்பம், வாழக்காப்பம், பழம் போளி என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.
செய்முறை[தொகு]
மாலைவேளை நொறுக்குத் தீனிகளில் முக்கிய இடம்பெறும் பழம்பொரியைச் செய்வது எளிது. பழம்பொரி செய்வதற்கு மிகுதியாக நேந்திரன்பழங்களே பயன்படுத்தப்படுகின்றன. நேந்திரன்காய் தோல் உருவி எடுத்து இரண்டாக பகுத்து, மைதா மாவில் பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுப்பது தான் பழம்பொரி. பழுக்காத நேந்திரன்காயுடன் கூட இதே போன்று கடலைமாவு சேர்த்து பொரித்து பணியாரம் செய்வதுண்டு. இதற்கு பஜ்ஜி என்று பெயர். சில சமயம் பழுத்த நேந்திரன்காய் புழுங்கிய பிறகு பழம்பொரி செய்வதுண்டு. அரிசி மாவில் சற்று சர்க்கரை, சீரகம் மற்றும் கொஞ்சம் மஞ்சள் தூளும் சேர்க்கலாம்.