பயனர் பேச்சு:Balaphys0/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் சொந்த ஊர் (உயிர்)[தொகு]

நவரெத்தினங்களில் ”முத்து” என்பது அனைவரும் அறிந்ததே! அதுபோல் உழவர்களின் உயிர் மூச்சு ”வயல்”என்பதும் அனைவரும் ஐயம்மற அறிந்ததே! இந்த இரு வார்த்தைகளின் கூட்டே எனது ஊர் ( முத்து+வயல் = முத்துவயல்) ”முத்துவயல்”.

பெயர் காரணம்[தொகு]

எனது ஊரில் நெல்,மிளகாய்,எள்,பருத்தி ....போன்றவை பயிரிடப்படுகின்றன.அழகிய வயல்வெளிகளில் நெற்கள் பயிருடுவதை பார்பது அவ்வளவு அழகான நிகழ்வு.நெல் வயல்வெளிகளில் நெற்கள் முத்து போன்று விளைந்து இருந்ததால் முத்துவயல் என்ற பெயர் வந்தது என்று எனது முன்னோர்கள் வாய்வழி செய்தியாக கேட்டு அறிந்துள்ளேன்.

அமைவிடம்[தொகு]

தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டத்தில் போகலூர் ஒன்றியத்தில் உள்ள அழகிய ஊர்.