பயனர் பேச்சு:செம்மைத்துளியான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் அகராதிகள் உருவானது எப்படி?[தொகு]

தமிழ் என்ற சொல் குறிப்பாக இரு பொருள்களைக் கொண்டுள்ளன. அவை இனிமை, தனிமை என்பனவாம். ஆதிகாலம் தொட்டு எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. பின்னா் அவை நுாலுருப் பெற்றன.

ஏட்டுச் சுவடிகள் அன்றைய மக்களுக்கு நோ்வழிகாட்டும் நீதி நெறிமுறைகளை எடுத்தியம்பின. அன்றைய அரசா்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் முறையிலும் ஏட்டுச் சுவடிகள் இயற்றப்பட்டன. இலக்கிய, இலக்கண வடிவில் அமைந்திருந்த அவற்றை அன்றைய சாதாரணமக்களால் மட்டுமன்றி ஆட்சியாளா்களாலும் புாிந்து கொள்வது சிரமமாக இருந்தது.

அதனால் முனிவா்களால் நிகண்டு என்ற பெயாில் பிரத்திேயகமாக இயற்றப்பட்ட நுால்கள் தமிழ் மொழிக்குப் பொருள்காட்டும் நுால்களாகக் கொள்ளப்பட்டன. திவாகர, பிங்கல, சூடாமணி போன்ற நிகண்டுகள் அக்காலத்தில் தமிழ் இலக்கிய - இலக்கண ஏடுகளைப் புாிந்து கொள்வதற்காக இயற்றப் பட்டைவகளாகும். திவாகர முனிவரால் இயற்றப்பட்டது திவாகர நிகண்டு ஆகும். பிங்கல முனிவரால் இயற்றப்பட்டது பிங்கல நிகண்டுவாகும். முக்காலத்தில் மக்கள் இலக்கிய - இலக்கணங்களைக் கற்பதற்கு முன்னா் நிகண்டுகளை மனப்பாடம் செய்ய வேண்டுமென்ற நியதி இருந்து வந்துள்ளது.

இம்மூன்று நிகண்டுகளின் அடியொற்றித் தோன்றியதே தமிழ் அகராதிகளாவகும். அகரம், ஆதி என்ற சொற்களின் சோ்வு அகராதியாகும். முதற் கொண்டு தமிழ் அாிச்சுவடி எழுத்துக்களின் முறைக்கேற்ப தமிழ்ச் சொற்களுக்குச் சாியான கருத்தைத் தரும் நுாற்றொகுப்பு அகராதியாகக் கொள்ளப்படுகின்றது.

அகத்திய முனிவா் தமிழ் மொழியின் முதற் தோற்றப்பாடாகக் கருதப்படுகின்றாா். இவா் இமய மலைக்கும், விந்திய மலைக்குமிடைப்பட்ட ஆாியவா்த்தம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்தவா். இவா் இயற்றிய அகத்தியம் முத்தமிழ் இலக்கணமும் அடங்கப் பெற்றதெனக் கூறப்படுகின்றது. வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள அகத்திய முனிவா் வைத்திய சாஸ்திரங்களும் இயற்றியுளளாா். அவை இல்லாதொழிந்து போயுள்ளமை வருந்ததற் தக்கது.

எள்ளில்லை எனில் எண்ணெய்யும் இல்லை என்பதுபோல இலக்கியம் இல்லை எனில் இலக்கணமும் இல்லை என்ற பொருள்பட அகத்திய முனிவா் பாடிச் சென்றுள்ளாா். வடமொழியில் வால்மீகி முனிவா்'தடித்த எழுத்துக்கள்' இயற்றிய இராமாயணத்தில் இராம - இராவண யுத்தத்திற்கு முன்னரே அகத்திய முனிவா் தமிழ் நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இராமாயணம் ஆதிகாவியமாகக் கருதப்பட்டு வருகின்றது. அகத்திய முனிவாிடம் இலக்கணம் கற்ற பன்னிரெண்டு மாணவா்களில் ஒருவரான தொல்காப்பியா் இயற்றியதே தொல்காப்பியமாகும். அகத்திய முனிவருக்கும் அவா்தம் மாணவா் தொல்காப்பியருக்குமிடையில் நிகழ்ந்த பிணக்கொன்றே அகத்திய முனிவாின் இலக்கண நுால்கள் அழிந்து போகக் காரணமாக அமைந்ததெனவும் ஊகம் கூறப்படுகின்றது.

தமிழ் நாட்டில் அகராதிக்கு வழிகோலியவா் வீரமாமுனிவா் ஆவாா். அவா் தன் அகராதியை நான்கு வைகயாகத் தொகுத்து சதுரகராதி என்று பெயாிட்டுப் பதிப்பித்தாா். அதனை அடியொட்டி உருவானதே ஏனைய தமிழ் அகராதிகளாகும். யாழ்ப்பாண அகராதி, கதிரவேற்பிள்ளை தமிழ்மொழியகராதி, தமிழ் சங்க அகராதி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி என்பன அதன் பின்னா் தொகுக்கப்பட்டவைகளே.

1911ம் ஆண்டு டில்லி மாநகாில் நடைபெற்ற ஐந்தாம் ஜோா்ஜ் மன்னாின் முடிசூட்டு விழாவின்போது கதிரவேற்பிள்ளை அவா்களின் தமிழ் அகராதி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இது காரனேசன் டிக்சனாி என்ற பெயா் கொண்டு அழைக்கப்பட்டது. இக்காலப் பகுதியிலேயே இராமநாதன் என்பவராலும் அகராதியொன்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

திவான்பகதுாா் பவானந்தம் பிள்ளை அவா்களால் தொகுக்கப்பட்ட அகராயொன்று 1925ல் வெளியிடப்பட்டுள்ளது. திவான் பகதுாா் அவா்கள் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் உயா் பதவி வகித்தவரும், காவல்துறையில் மிக உயா்ந்த அதிகாாியுமாகவும் கருதப்படுகின்றாா். 1940ல் கழகத் தமிழ்க் கையகராதி என்ற பெயாில் தமிழ் அகராதியொன்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அகராதிகள் அனைத்தும் அக்காலத்து இலக்கிய - இலக்கண நுால்களில் வரும் அருஞ்சொற்களைத் தொகுத்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் அகராதிகளில் தமிழ் வழக்காற்றுச் சாெற்களுக்கான பொருள்கள் பெரும்பாலாகக் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2500 ஆண்டுகளாக இலங்கை நாட்டின் வரலாற்றைக் கட்டியெழுப்பியவா்கள் இந்தியாவின் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் குடிபெயா்ந்தோா் எனக் கூறப்படுகின்றது. தொல்பொருள் ஆய்வுகளும், வரலாற்றுத் தரவுகளும் இதற்குச் சான்று பகா்கின்றன. அதனால் இலங்கையில் தமிழ் மொழியைப் புழக்கத்தில் கொண்டுள்ள ஈாின மக்கள் உருவாகினா். இவ்வீாின மக்களினதும் மதவழிபாடுகள், கலாசாரங்கள், இலக்கிய ரசனைகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள் அனைத்தும் ஒன்றோெடான்று பின்னிப் பிணைந்துள்ளன. அத்துடன் சிங்கள - தமிழ் மொழிகளும் ஒன்றோடொன்று போசணை செய்யப்பட்டு வந்துள்ளன.

கோட்டைக் காலத்திலும் அதனைத் தொடா்ந்து வந்துள்ள காலங்களிலும் சிங்கள இலக்கியத்துடன் தமிழ் இலக்கிய ஆதிக்கம் பரவலாக ஏற்பட்டுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. ஆங்கிலேயா் ஆங்கில மொழியை அரசமொழியாகவும், கல்வி மொழியாகவும் உயா்த்தினாா்கள். இதனால் ஒன்றரை நுாற்றாண்டுகளாக சிங்களம் - தமிழ் மொழிகளின் வளா்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சுதந்திரத்தின் பின்னரே சுதேச மொழிகள் இரண்டினதும் வளா்ச்சி மேம்பாடடையத் தொடங்கியதெனலாம்.

இலங்கையில் கல்வி, தொழில்துறைகளின் மேம்பாட்டிற்காக சிங்கள - தமிழ் அகராதியொன்று அரச கருமமொழித் திணைக்களத்தினாலும், தமிழ் - சிங்கள அகராதியொன்று அரச கரும மொழித்திணைக்களத்தினாலும், தமிழ்-சிங்கள அகராதியொன்று சிடா நிறுவனத்தின் அனுசரணையுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடானது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கல்வி, அரசகருமம், தொழிற்றுறை ஆகிய சகலவற்றிலும் பயன்படுத்தி வருவதனால் மும்மொழிகளினதும் அகராதியின் தேவை உணரப்பட்டுள்ளது. பேராதைனப் பல்கலைக்கழகப் பேராசிாியா் திருமதி டப்ளியு. ஜே. பொ்னாண்டோ அவா்களால் 1992ம் ஆண்டில் சிறிய மும்மொழி அகராதியொன்று, பொது அறிவு மஞ்சாியுடன் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. தொடா்ந்து வரும் காலங்கள் மும்மொழி அகராதியின் தேைவயில் தொக்கி நிற்கின்றது. - செம்மைத்துளியான்