பயனர்:Tnsc thamarai nil/மணல்தொட்டி
திருக்குறளில் சேட்டா தேவி'
சேட்டா தேவி
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது முதலாவதாக வந்தவள் சேட்டா தேவி. முதலாவதாக வந்ததால் இவள் மூத்ததேவி(மூதேவி)எனவும் பெயர் பெற்றாள். சேட்டா என்றால் முதல் எனப் பொருள்.
திருக்குறளில் திருமகள்
திருவள்ளுவர் தாம் எழுதிய
84 வது குறளில் செய்யாள்
என்று ம்
167வது குறளில் செய்யவள் என்றும்
179,519,920ஆகிய குறள்களில் திருஎன்றும்
617வது குறளில் தாமரையினாள் என்று ம் திருமகளை நன்மை தரும் தெய்வமாக சுட்டி காட்டி உள்ளார்.
'திருக்குறளில் சேட்டா தேவி'
திருமகளின் தங்கையாக விளங்கும் சேட்டா தேவியைத்
"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வை யைக் காட்டி விடும்"
தவ்வை என 167வது குறளில் சுட்டி உள்ளார்.
வறுமையை விளக்கு ம் சொல்லாக சேட்டா தேவியை கூறியுள்ளார்.
"மடியுளாள் மாமுகடி என்ப மடியிலாள் தாள்உளாள் தாமரையினாள்"
என்று167வது குறளில் சோம்பலை "மாமுகடி " என கூறியுள்ளார்.
"அகடு ஆரார் அல்லல்உழப்பவர் சூதுஎன்னும்
முகடியால் முடப்பட்டார்.'
,என936வது குறளில் சூதினை முகடியாக கூறியுள்ளார் .
முகடி க்கு பரிமேலழகர் "கரிய சேட்டை "என பொருள் கூறுகிறார்.
தவ்வை,மாமுகடி ஆகிய சொற்கள் சேட்டா தேவியை குறிக்கும்.
சேட்டா தேவியின் கொடி -காகம்
ஆயுதம்- துடைப்பம்