பயனர்:Tharani119

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர், வேட்கோவர் குலத்தில் பிறந்ததாக கருதப் படுகிறார். தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர் என்றும் கூறப் படுகிறது.

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.

"சித்தான சித்து முனி போக நாதன் சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன் கத்தநேனும் காலாங்கி நாதர் சீடன் கனமான சீனபதிக் குகந்த பாலன் முத்தான அதிசயங்கள் யாவற்றும்தான் மூதுலகில் கண்ட முதல்வன் சித்தன் நித்தமுமே மாசில்லாக் கடவுள் தன்னை மாநிலத்தில் மறவாத போகர் தானே"

என்று அகத்தியரே இவர் பெருமையைப் பாடியுள்ளார்.

இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.

இது தவிர....

போகர் 12000 போகர் நிகண்டு 1700 போகர் வைத்தியம் 1000 போகர் வைத்தியம் 700 போகர் சரக்கு வைப்பு 800 போகர் ஜெனன சாகரம் 550 போகர் கற்பம் 360 போகர் கற்பம் 300 போகர் உபதேசம் 150 போகர் இரண வாகடம் 100 போகர் நானா சாராம்சம் 100 போகர் கற்ப சூத்திரம் 54 போகர் வைத்திய சூத்திரம் 77 போகர் மூப்பு சூத்திரம் 51 போகர் ஞான சூத்திரம் 37 போகர் அட்டாங்க யோகம் 24 போகர் பூஜா விதி 20 போகர் மாந்திரீகம் 74

என்கிற நூல்களையும் இயற்றியதாக கூறப் படுகிறது.

பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tharani119&oldid=2402342" இலிருந்து மீள்விக்கப்பட்டது