பயனர்:TNSE Tamerin ARY/மணல்தொட்டி/4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                            ===அர்விந் அடிகா===
               அர்விந் அடிகா மங்களூரைச் சேர்ந்த டாக்டர் கே.மாதவ அடிகா மற்றும் உஷா அடிகாவுக்கு மகனாக 23, அக்டோபர் 1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவருடைய தந்தை வழி தாத்தா சூர்யநாராயணா அடிகா கர்நாடகா வங்கியின் முன்னால் தாளாளர் மற்றும் தாய் வழி கொள்ளு தாத்தா யூ.ராமா ராவ் சென்னையில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதி.
               அடிகா மங்களூரில் உள்ள கனரா உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.பின்பு செயின்ட் அலாய்சியஸ் பள்ளியில் இடைநிலைக்கல்வியை 1990 ம் ஆண்டு முடித்து மாநில அளவில் முதலிடம் பெற்றார்(இவரின் மூத்த சகோதரர் ஆனந்த் இடைநிலைக்கல்வியில் மாநில அளவில் இரண்டாமிடமும், முன் பல்கலைக்கழக கல்வியில் முதலிடமும் பெற்றிருந்தார்).
                '
               தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிப்பெயர்ந்த பிறகு,அடிகா ஜேம்ஸ் ரூஸ் விவசாய உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.பிறகு ஆங்கிலேய இலக்கியத்தை நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கொலம்பியா கல்லூரியில் சைமன் ச்சமா என்பவரின் தலைமையின் கீழ் பயின்று 1997 ம் ஆண்டு வணக்கம் தெரிவித்து பேசும் மாணவராக பட்டம் பெற்றார்.இவர் ஆக்‌ஸ்ஃஃபோர்டிலுள்ள மேக்டலென் கல்லூரியிலும் பயின்றார்.அங்கு அவரின் ஆசிரியர்களுள் ஒருவரான ஹெர்மியோன் லீ இருந்தார்.
                அடிகா அவருடைய பத்திரிக்கை தொழிலை ஒரு நிதிநிலைக்குரிய பத்திரிக்கையாளராக ஃபினான்சியல் டைம்ஸில் பயிற்சி பெற்றார். ஃபினான்சியல் டைம்ஸ் மற்றும் மனியில் வெளியான சில துணுக்குகளில் அவர் பங்குச்சந்தை மற்றும் முதலீடு பற்றியும்,டொனல்ட் ட்ரம்ப் உட்பட பலரையும் நேர்காணல் கண்டதும் இடம் பெற்றது. முன்னாள் புக்கர் பரிசு வெற்றியாளர் பீட்டர் கேரியின் ஆஸ்கார் மற்றும் லுசின்டா என்ற புத்தகத்தைப் பற்றி இவரின் ஆய்வு  தி செகன்ட் சர்க்கில் என்ற இணைய இலக்கிய ஆய்வில் இடம் பெற்றது.
                பின்னர் டைம் பத்திரிக்கையால் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.அங்கு சுதந்திர எழுத்தாளர் ஆவதற்கு முன்பு மூன்று வருடங்கள்  ஒரு தெற்கு நிருபராக இருந்தார்.அவர் சுதந்திர எழுத்தாளராக இருந்த போது தி ஒயிட் டைகர் என்ற புத்தகத்தை எழுதினார்.அர்விந் அடிகா தற்போது இந்தியாவின் மஹாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

https://ta.wikipedia.org/w/index.php?title=TNSE_Tamerin_ARY/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/4&action=submit

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Tamerin_ARY/மணல்தொட்டி/4&oldid=2326016" இலிருந்து மீள்விக்கப்பட்டது