உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE SIVAKUMAR ERD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்புங்க அறிவியலை!.. நம்பாதீர்கள் மூடநம்பிக்கைகளை!!

அன்பானவர்களே, நாம் அறிவியலில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளோம். செவ்வாய் கிரகத்திற்கு கூட , விண்கலத்தை அனுப்புகின்ற அளவுக்கு நமது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால், நாம் பழைய பழக்கங்கள் என்று சொல்லி, சிலவற்றை பின்பற்றுவதன் விளைவாக, நமது கால நேரம் விரையமாகதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஏராளமான சங்கடங்களும் உருவாகின்றன. அறிவியலை அறிந்த நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோமா? என்று கேள்வி கேட்டு, அதற்குரிய விளக்கங்களைத் தருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்..

பேய்- பிசாசு பயம்[தொகு]

இன்னமும் நமது கிராமங்களில் பேய் பிடித்து விட்டது என்று சொல்லி மந்திரவாதிகளை அழைத்து வந்து, சம்பந்தப்படவரை சாட்டையால் அடித்து பேயை விரட்டுவதாகக் கூறுகிறார்கள். பேய் என்பது மின்சாரம் இல்லாத காலத்தில், இருட்டாக இருந்த போது வந்த பயம்.படித்தவர்களைப் பேய் பிடிக்கிறதா? டாக்டர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே! மனநலம் பாதிப்பு என்றால் மந்திரவாதிகளிடம் போகாமல், மனநல மருத்துவரிடம் போக வேண்டும். இதுதான் அறிவியல்.

பில்லி- சூன்யம்[தொகு]

சூனியம் வைத்து ஒருவரை அழித்து விட முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள். அப்படியானால், எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சூனியம் வைத்து அழித்துக் கொள்ள முடியுமா? பிறகு எதற்கு தேர்தல்? எதற்கு போட்டி? நன்றாக யோசியுங்கள். பில்லி சூனியம் என்று சொல்லி, மோசடிக்காரர்களை நம்பி, உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள்.

ஜோதிடம்[தொகு]

பல குடும்பங்களில் குழப்பத்தை உருவாக்குவதே இந்த ஜோதிடம் தான்.. ஜோதிடத்தின் அடிப்படையே தவறு.

சூரியன் மையமாக உள்ளது. பூமி உள்பட 8 கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்று கூறுவதுதான் அறிவியல்.. அதுதான் நிரூபிக்கப்பட்டதும் கூட.. ஆனால், ஜோதிடத்தில் பூமி மையமாகவும்,சூரியன் உள்பட, ராகு கேது போன்ற இல்லாத கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றுகின்றன என்று கூறுவதுதான் ஜோதிடம்.. அறிவியல் படித்த நாம் இந்த ஆதாரமில்லாத கற்பனையை ஏற்றுக் கொண்டு நம் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளலாமா? சிந்தியுங்கள்..

  • இன்றைக்கு குடும்பநல நீதிமன்றங்களுக்கு வரும், வழக்குகளில் சம்பந்தப்பட்ட கணவன் மனைவியர் ஜோதிடம் பார்த்துத்தானே திருமணம் செய்து இருப்பார்கள். பொருத்தம் பார்த்துதானே திருமணம் செய்து இருப்பார்கள்? பிறகு ஏன் இந்த நிலை? நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?? சிந்தியுங்கள்..

வாஸ்து[தொகு]

வாஸ்து சரியில்லை என்று கூறி, கடன் வாங்கி செலவு செய்து கட்டிய வீட்டை மாற்றி மாற்றி இடித்துக் கட்டி, பணத்தை வீணாக்குகிறார்களே இது சரியா?? வீட்டில் கழிப்பறை கட்டுவது கூட , வாஸ்துவுக்கு எதிரானதுதான்.. நாம் அதற்காக கழிப்பறை கட்டாமல் விட்டு விடுகிறோமா? இல்லையே? வாஸ்து பார்த்து கட்டிய கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஏன் இடிந்து விழுகின்றன? நாம் சிந்திக்க வேண்டாமா??

பரிகாரம்[தொகு]

வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்தால் போதும் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நம்மிடம் பணத்தைப் பிடுங்குகிறார்கள்..இதை நாமும் நம்பி நம் வாழ்நாள் முழுதும் பரிகாரங்கள் செய்கிறோம். ஆனால், பிரச்சினைகள் தீர்ந்ததா? இல்லையே?

தலைவிதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள். அப்படி என்றால், பிறகு எதற்கு ஜோதிடம்? எதற்கு வாஸ்து? எதற்கு பரிகாரம்?

இறுதியாக,

அறிவியல் அறிவு நம் எல்லோரிடமும் உண்டு.. ஆனால்,அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள நம்மில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதற்கு நம் மனதின் பயம் தான் காரணம். பயத்தை விட்டொழிப்போம். அறிவுள்ள சமுதாயம் படைப்போம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SIVAKUMAR_ERD/மணல்தொட்டி&oldid=2338611" இலிருந்து மீள்விக்கப்பட்டது