பயனர்:TNSE KARTHIKEYAN ERD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'நீலகிரி மந்தி என்பது பளபளப்பான கருமையான உடலும்,மஞ்சளும் பழுப்பு வண்ணமும் கலந்த தலையும் அமையப் பெற்றது. நீலகிரி என்று பெயரளவில் சுட்டப் பட்டாலும் ,கர்நாடகாவின் குடகிலிருந்து,தமிழ்நாட்டின் பழனிமலை வரையிலும்,கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறது இவை குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாகவே தெரியும்.இதன் முக்கியத் தீனி ,பழங்கள்,இலைகள் மற்றும் தண்டுகளாகும்.சோலைக்காடுகளை மனிதன் தனக்குரித்தாக்கிக் கொண்டதால் , இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இதன் மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும் ,"சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும் மருந்து "என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப் படுவதால் ,இது ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.