பயனர்:TNSE JESLIN KKD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

என கவிஞர்கள் பாடினாலும் பெண்ணுரிமை என்பது இன்னும் எட்டா கனியாகத்தான் உள்ளது. பெண்ணுரிமைக்கான போராட்டம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. பெண்ணுரிமை போராட்டங்களுள் பொதுமக்கள் அறிந்திராத பல போராட்டங்கள் சமுகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அத்தகைய போராட்ட பெண்களுள் தன் மானமும், தன் சமுக மானமும் காக்க முன் வந்த வீர மங்கையைப் பற்றி காண்போம்.

திருவிதாங்கூர் நாடு;:

திருவிதாங்கூர் நாடு இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது. திருவிதாங்கூர் நாடு, திருவனந்தபுரத்தை தலைநகராக கொண்டும், வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொரித்த செந்நிறக் கொ டியைக் கொண்டும் ஆட்சி நடத்தப்பட்டது.

தோள் சீலைக்கு வரி:

தோள் சீலைக்கு வரி விதிக்கும் வழக்கம் 19-ம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஈழவர்கள் அதிகமாக வாழ்ந்த கேரளாவில் திருவாங்கூர் அரசன், ஈழவ பெண்கள் மார்பை மறைக்க வரி விதித்து வந்தான். திருவாங்கூர் அரசு கூறியது யாதெனில் “மார்பை மறைக்க விரும்பும் ஈழவ பெண்கள், கட்ட வேண்டிய வரி, தோள் சீலை வரி. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது”.

நாஞ்செலியின் வீரஉணர்வு:

திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட பகுதியில் சேர்தலா என்ற இடத்தில் ஒரு சிற்றுரில் 30 வயதுடைய நாஞ்செலி வசித்து வந்தார். அவர் “எனது மானத்தை காப்பது எனது உரிமை” என்றார். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். திருவிதாங்கூர் அரசுக்கு வரி செலுத்தவும் மறுத்துவிட்டார்.

நாஞ்செலியின் வீரமரணம்:. 

பல மாதங்களாக ஆகியும் அவர் வரிகட்டவில்லை.பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. ஒரு நாள் அரசின் வரிவிதிப்பாளர் அவரைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டார். “உனது மார்புக்கு வரி கட்டு”என்று கேட்டான். “கொஞ்சம் நேரம் காத்திருக்கவும”; என்றார் நாஞ்செலி. சரி பொருளை எடுத்து வருவாள் என்று வரிவிதிப்பாளர்கள் காத்திருந்தனர். உள்ளே சென்ற நாஞ்செலி வாழையை வெட்டும் அரிவாளோடு வந்தார். பின் “இது இருந்தால் தானே வரி கேட்பாய்” என்று சொல்லி தன் இரு மார்பையும் வெட்டி எறிந்தார். சற்று நேரத்தில் அவர் உயிரும் பிரிந்தது. 

மக்கள் கிளர்ச்சி:

நாஞ்செலியின் வீர மரணத்தால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருவாங்கூர் அரசுக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கும் தோள் சிலை போராட்டம் தீவிரம் அடைந்தது. நாஞ்செலியின் செயலை அறிந்த திருவாங்கூர் அரசு அப்பகுதியில் மட்டும் வரிவிதிப்பை ரத்து செய்தான். மக்கள் இவரது வீர செயலை போற்றும் வகையில் அவரது ஊருக்கு ‘முலச்சி பரம்பு’ என்று பெயர் வைத்தனர். ஆனால் இன்று வரை இவருக்கு எந்த பகுதியிலும் நினைவு சிலை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

சாதியின் பெயரால் அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும். மானம் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை மனித குலம் அறிய வேண்டும்.  சமுக நலனுக்காக தன் உயிரிரையே தியாகம் செய்யும் இத்தகைய இலட்சிய பேராளிகளை சமுகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JESLIN_KKD/மணல்தொட்டி&oldid=2290397" இலிருந்து மீள்விக்கப்பட்டது