பயனர்:TNSE C.INBARAJ NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளரிளம் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா? முன்னுரை:

    சமீப காலங்களில், நிறைய வளரிளம் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.  மனச்சோர்வால் கடினப்படுகின்ற பிள்ளைகளுக்கு என்னென்ன ஆலோசனைகள் உதவியாக இருக்கும்?

அவர்களுக்கு பெற்றோர்கள் எப்படி உதவி செய்யலாம்?

வளரிளம் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதற்கான காரணங்கள்

உலக சுகாதார அமைப்பு இப்படி சொல்கிறது. பல பிரச்சினைகள் ஒருவரை ஒரே சமயத்தில் தாக்கும்போது அவருக்கு மனச்சோர்வு வரலாம். ஒருவேளை உடல்நல பிரச்சனை, மன அழுத்தம், மற்றவர்களால் மோசமாக நடத்தப்படுவது போன்றவை கூட மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

உடல்நலப்பிரச்சைனகள்

இதய நோய், ஹார்மோனின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவது, போதைப்பொருளை அதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் மனச்சோர்வு இன்னும் அதிகமாகலாம்.  பரம்பரையும் காரணமாகலாம்.

இதரப்பிரச்சனைகள் அப்பா அம்மா விவாகரத்து செய்து அல்லது பிரிந்து வாழ்வது பாசமான ஒருவர் இறந்து போவது கொடுமைப்படுத்துவது செக்ஸ் தொல்லை பயங்கரமான விபத்தில் மாட்டிக்கொள்வது வியாதியால் கஷ்டப்படுவது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதால் ஒதுக்கப்படுவது போன்ற காரணங்களால் மன அழுத்தம் வரலாம். கடைசியில் அது மன சோர்வில் போய் முடியும்.

உதவியாய் இருக்கும் ஆலோசனைகள் 1.மனதையும் உடல நலத்தையும் பராமரியுங்கள் 2.ஒரு மனநல நிபுணரால்தான் மனசோர்வுக்கு சிகிச்சை கொடுக்க முடியும். " ஆரோக்கியாமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் தேவை.(மாற்கு 2:17). 3.சத்தான உணைவ சாப்பிடுங்கள் 4.போதுமான அளவு துங்குங்கள் 5.தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

பெற்றோருடைய உதவி: 1.பிள்ளைகளுக்கு மனச்சோர்வு என்றால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். 2.மருத்துவர் சொல்கின்ற ஆலோசனைப்படி நடக்க அவர்களுக்கு உதவுங்கள் 3.சரியான நேரத்திற்கு சாப்பிடவும் துங்கவும் உடற்பயிற்சி செய்யவும் குடும்பமாக முயற்சி செய்யுங்கள் 4.அவர்களிடம் பேச நேரம் ஒதுக்குங்கள். 5.அவர்கள் தனிமையுணர்வால் கஷ்டப்படுவார்கள். எனவே அவர்கள் மீது நீங்கள் நிறைய அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்

கவலைகளை எப்படி சமாளிப்பது? www.jw.org என்ற தலைப்பில் பாருங்கள்.

2. பிரமிக்க வைக்கும் ஆா்டிக் டெர்ன்:

   ஆர்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிக்காவுக்கு போய் வர ஆர்டிக் டெர்ன் என்ற பறைவகள்  சுமார் 35,200 கி.மீ (22000 மைல்கள்)துாரம் பயணம் செய்ததாக சமீப ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
  ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் தொிவித்துக்கொள்வதற்கா்க பயன்படுத்தப்படும் சிறிய கருவிகள்  (geolocators) இந்தப் பறவைகளில் பொறுத்தப்பட்டன.  இந்தப் கருவிகளின் எடை, ஒரு பேப்பர் கிளிப்பின் எடைக்கு சமம்.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய்வர சில டெர்ன் பறவைகள் சராசாியாக 90,000 கி.மீ (56,000 மைல்) துாரம் பயணம் செய்வதாக இந்தக் கருவிகள் காட்டுகின்றன.  இடம் பெயரும் விலங்குகளிலேயே இவைதான் அதிக துாரம் இடம் பெயர்கின்றன.  ஒரு பறவை கிட்டத்தட்ட 96.000 கி.மீ (60,000 மைல்) துாரம் பயணம் செய்தது.  டெர்ன் பறவைகள் முன்பைவிட இப்போது அதிக துாரம் பயணம் செய்வதற்கு காரணம் என்ன? 
 ஆர்டிக் டெர்ன் பறவைகள் எங்கிருந்து இடம் பெயர்ந்தாலும் நேரான ஒரு வழியில் பயணம் செய்வதில்லை.  எஸ் வடிவத்தில் பயணம் செய்கிறது.  வழக்கமாக வீசும் காற்றின் திசையில் இவை பறப்பது தான் அதற்கு காரணம்.  
 இந்த பறவைகள் சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.  இந்த காலப்பகுதியில் அவை 24,00,000 க்கும் அதிகமான கி.மீ துாரம் பயணம் செல்கின்றன.  இதில் 3 அல்லது 4 முறை நிலாவிற்கு போய்வருதற்கு சமம்.  இது 100 கிராம் எடையுள்ள ஒரு பறவையின் பிரமிக்கும் வைக்கும் சாதனை என்பதாக ஒரு ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.  இன்னொரு விஷயம் என்னவென்றால் இரண்டு துருவங்கிளலும் இவை கோடை காலத்தை அனுபவிப்பதால் வேறு எந்த உயிரணத்தையும் விட ஒவ்வொரு வருடமும் இவை தான் அதிகப்படியான வெளிட்சத்தை பார்ப்பதாக லைஃபான் எர்த் எ நேச்சுரல் ஹிஸ்டாி என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
                                                                   இன்பராஜ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_C.INBARAJ_NGP/மணல்தொட்டி&oldid=2313836" இலிருந்து மீள்விக்கப்பட்டது