பயனர்:Salemselvaraj
எஸ்.செல்வராஜ். (பிறப்பு: ஜூன் 10, 1976; சேலம்) தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சேலம் அரசு கலை கல்லூரியில் பொருளாதரத்தில் இளங்கலை பட்டப்படிப்பும் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்தவர். தமிழகத்தில் முதன் முதலில் பேட்டித்தேர்வுகளுக்காக தமிழில் பொது அறிவு மலர் என்ற மாத இதழை 2000 ஆம் ஆண்டு துவங்கினார். அவிதழ் பொருளாதார நெருக்கடியால் நின்றுவிட்டது. பின்னர் பொது அறிவு உலகம் மாத இதழ் 2004 ஆம் ஆண்டு டாக்டர் அகிலன் இராம்நாதன் மற்றும் எஸ்.செல்வராஜ் இருவரால் துவக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து வெளிவருகின்றது.இவ்விதழின் பதிப்பாளர் மற்றும் உரிமையாளர் நக்கீரன்கோபால் ஆவார்.தற்போது பொது அறிவு உலகம் இதழின் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
படைப்புகள்[தொகு]
- அரசு மற்று தனியார் வேலைவாய்ப்புகள்
- நக்கீரன் இயர்புக் 2011
- நுழைவுத்தேர்வு வழிகாட்டி
- பணமில்லாமல் படிக்கலாம்
- குற்றம் நடந்தது என்ன? (புலனாய்வு நூல்)
- வி.ஏ.ஓ சிறப்பிதழ்கள் ( ஐந்து நூல்கள்)
- டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான நூல்