பயனர்:SITHAN SHIVAMARI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கை ஆழ்வார் முத்தரையர்

திருமங்கையாழ்வார்;

-----------------------------------------------

திருமங்கை ஆழ்வாரின் தந்தை பெயர் ஆலிநாடன். தாயார் வல்லித்திரு என்பதாகும். இவரின் இயற்பெயர் நீலன் என்று பெற்றோர் பெயரிட்டனர். இவர் காவிரி வளநாட்டில் திருவாலி நாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்கி பல கலைகளையும் வைக்கப்பட்டார்.

இவர் இளமையிலேயே போர் கலையையும் கற்றுத் தேர்ந்தார். இவர் போர்த்திறத்தையும் உடல் வலிமையையும் வனப்பையும் வளர்த்துக் கொண்டிருந்தார், அப்போது நீலன் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையர் மன்னரிடம் படைத்தளபதியானர். சோழர்களை எதிர்த்த அரசர்களை எல்லாம் நீலன் வெற்றி கொண்டார் வெற்றிக்களிப்பில் தனது சேனாதிபதியை ஆலிநாட்டிற்கு அரசனாக்கினார். இந்த நாட்டிற்கு திருமங்கை என்னும் ஊர் தலைநகராக இருந்தது. நீலன் பகைவர்களுக்கு காலன் போல் விளங்கியதன் காரணமாக பரகாலன் என்ற சிறப்பு பட்டத்தையும் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையன் மன்னர் அளித்தார். இதனால் நீலன் என்பவரை திருமங்கை மன்னர் என்றே அனைவரும் அழைத்தனர்.

நீலன் திருமணப் பருவம் அடைந்தார், குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்க வேண்டினார்.

அரசியின் வாக்கிற்கிணங்க அரசன் நீலன் திருத் தொண்டர் களுக்கு அமுது படைத்துப் படைத்து தனது அனைத்து செல்வங்களையும் இழந்தார், தொண்டர்களுக்கு உணவளிக்க வேறு பொண்ணும் பொருளும் இல்லாமையால் திருமங்கை ஆழ்வார் வருந்தினார். ஆனாலும் எப்போதும் போல உணவு வழங்க முடிவு செய்தார் பொருள் வேணுமே கொள்ளையடித்தாவது உணவு அளிக்க முடிவு செய்தார் . கொள்ளையடித்த பொருட்களை கொண்டு உணவளித்து வந்தார். ஒரு நாள் பரகாலர் என்ற திருமங்கை மன்னன் திருமணங்கொல்லையில் திருடும் கூட்டத்தோடு பதுங்கி இருந்தார். இந்த வழியாக வருபவர்களிடம் கொள்ளையடித்து வந்த பொருட்களை கொண்டு திருமால் தொண்டர்களுக்கு உணவு வழங்கி வந்தார், இவ்வாறு வழிப்பறி செய்யும் போது திருமாலின் குறியை, நெற்றியில் திருமண், வைத்திருப்போரிடம் கொள்ளையடிப்பதை தவிர்த்தார்.

அரசனாகிய பரகாலர் எனும் திருமங்கை மன்னன் தவறான வழியில் சேர்த்த பொருளால் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை திருமால் விரும்பவில்லை, திருடுவதை தடுக்க நினைத்தார், திருமால் தானே தன் தேவியருடன் நிறைய நகைகளை அணிந்துகொண்டு திருமண கோலத்தில் சுற்றம் சூழ சேனைத்தலைவர் உடன் கூட்டமாக வந்தார், திருமங்கை மன்னன் மறைந்து இருக்கும் இடத்தின் வழியே வந்தனர், திருமங்கை ஆழ்வார் கூட்டத்தை கண்டதும் பாய்ந்து அவர்களை சூழ்ந்து கொண்டார், உங்களிடம் உள்ள எல்லா நகைகளையும் கழற்றி தரச் சொன்னார் மறுத்தால் எங்கள் வாளுக்கு உங்கள் உயிர் பலியாகிவிடும் என்று கூற, அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர். கழற்றிக் கொடுத்த நகைகளை சரி பார்த்தார். திருமால் ஆகிய மாப்பிள்ளையின் வலது கையில் ஒரு விரலில் மட்டும் ஒரு மோதிரம் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார்.

மாப்பிள்ளை வேடமிட்ட திருமால் இந்த மோதிரத்தை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கையாழ்வார் முனைந்து தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்த மோதிரத்தை கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, மாப்பிள்ளையான பெருமாளும் நம் கலியனோ? என்றார். பிறகு நகைகளையும் அணிகலன்களையும் தம் பணியாளர்களை கொண்டு மூட்டை கட்ட சொன்னார் பரகாலன், அந்த மூட்டையை தூக்க முயன்ற அவர்களால் நகர்த்த கூட முடியவில்லை, பரகாலன் என்றதிருமங்கையார் கோபங் கொண்டு மாப்பிள்ளை நோக்கி, மூட்டையை தூக்க முடியாமல் ஏதோ மந்திரத்தை போட்டுவிட்டாய். அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று அதட்டினார்.

மாப்பிளை (பெருமாள்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கையார் திருமால் அருகே சென்றார். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னர் அகக்கண் திறந்து பெற்ற தாயினும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்" என்று வாயார நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் பேரருள் பொங்கும் கண்களால் திருமங்கை ஆழ்வாரை பார்த்தார். பிறகு தோன்றிய அனைவரும் மறைந்து விட்டனர் இந்நிகழ்ச்சியை இன்றும் பல்வேறு இடங்களில் "வேடு பறி நிகழ்ச்சி"_யாக அரசு அறநிலையத் துறை மூலமாக நடத்தி வருகின்றனர்.

திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.

"வாடினேன் வாடினேன் மனத்தாற்

பெருந்துயர் இடும்பையிற் பிறந்து

கூடினேன், கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன், உயவதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்"

என்று தொடங்கி பத்துப் பாசுரங்களைப் பாடினார், திருவரங்கம் சென்றார், திருமங்கை மன்னன் பதவியை துறந்து, திருமாலை வணங்கி பாடி திருமங்கை ஆழ்வார் ஆனார், வைணவ நெறிகளையும், செந்தமிழையும் கவியாகப் பாடி வளர்த்தார், பிற ஆழ்வார்கள் பாடாத சித்திரக் கவியை ஏழு ஒற்றைப்படை தத்துவ அடிப்படையில், செந்தமிழால் கவி பாடி (திருவெழு கூற்றிருக்கை) சிறப்பித்தார். இக்கவிகள் கும்பகோணம் சக்கரபாணி கோயில் தெற்கு சுவற்றில் உள்ளது. ஆழ்வார் களிலேயே அதிகமாக 87 தலங்களுக்குச் சென்றார், தமிழ் பாடல்கள் பாடி மங்களாசாசனம் செய்தார், திருவரங்கத்தில் பல கட்டிடப் பணிகளை செய்தார், இவற்றையெல்லாம் "கோயில் ஒழுகு" ஆங்கில நூலில் டாக்டர் ஹரிராம் சிறப்பித்து எழுதியுள்ளார். இவரால் கட்டப்பட்ட கோயில்கள், கட்டிடங்கள், மதில்கள், நெற்களஞ்சியம், சமையல் கூடம், படித்துறை, ஆகியவற்றை நூலில் தெரிவித்துள்ளார் திருவரங்கத்தில் நான்காம் திருவீதியின் திருச்சுற்று மற்றும் கோபுரங்களையும் கட்டியுள்ளார். இக்கோயிலின் நான்காம் திருச்சுற்று வடக்கு பகுதியில் "காந்தார புட்கரணி" என்ற வட்டவடிவ குளம் அதைத்தொடர்ந்து ஆலி நாடன் வீதியின் வடக்குப் பகுதியிலும் திருநடை மாளிகை அமைத்தார். வடக்கு கோபுரத்தில் உள்ள அழகிய சிவபெருமான் கோயிலும், விமானமும், திருப்பண்டாரம், திருக்கொட்டாரம் கட்டி முடித்தார். இந்த மதிலுக்கு உட்பட்ட பிரகாரத்திற்கு ஆலிநாடன் திருவீதி என்ற பெயர் இன்றும் உள்ளது. இங்கே திருமடைபள்ளியையும் கட்டினார்.

நாகப்பட்டினத்திலிருந்து தங்க புத்தர் சிலையை எடுத்து வந்து இங்கே கோயில் கருவறை விமானத்துக்கு பொன் கூரை அமைத்தார், ஐந்தாவது திருச்சுற்றில் "முத்தரசன் குருடு" என்ற ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார், இரண்டாவது சுற்றில் தபோலோகம் என்ற அழகிய கிளி மண்டபத்தை கட்டினார், திருமாமணி மண்டபம், 100 கால் மண்டபத்தை கட்டினார். நான்காவது சுற்றில் தெற்கு வடக்கு கோபுரங்களை கட்டினார், கொள்ளிடம் தென்கரையில் தசாவதாரக் கோயில் கட்டி கர்ப்பகிரகத்தில் 10 சிலைகளை அமைத்தார், தனக்கென ஒரு கோயிலையும் கட்டினார், கொள்ளிடக் கரையில் இறந்தோர் பரமபதம் அடைய நிலத்தை வாங்கி மண்டபம் கட்டினார், இந்த படித்துறை "திருமங்கை மன்னன் படித்துறை" என்றே அழைக்கப்படுகிறது.

திருவரங்கத்தில் மேட்டு அழகிய சிங்கர் சன்னதியை ஏற்படுத்தினார். உத்தமர் கோயிலில் மதில் கட்டினார், கலியுக ராமன் என்பவர் திருமங்கையாழ்வார் பெயரில் மடம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். கும்பகோணம் ஆரா வமுத பெருமாள் கோயிலுக்கு சித்திரை தேர் செய்து கொடுத்தார் இதை அவரே மங்களாசாசனம் செய்தார். அரங்கநாதர் கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு வேய்ந்தார், திருவரங்கம் அரங்கநாதர் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்தார் தீர்த்தம் மாலை பரிவட்டம் கொடுத்து மறைந்தார்.

திருமங்கை ஆழ்வார் உறையூர் சென்றார் ஒரே ஒரு பாடல் பாடி மங்களாசாசனம் செய்தார். உத்தமர் கோயில் சென்று தங்கியிருந்தார். திருவெள்ளறை சென்றார் 10 பாக்களில் பாடி மங்களா சாசனம் செய்தார்.

கோவிலடி சென்றார் 10 தமிழ் பாடல்களைப் பாடி மங்களாசாசனம் செய்தார். திருக்கண்டியூர் சென்றார் ஒரு பாடல் பாடி மங்களாசாசனம் செய்தார். இதுபோல 87 க்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சென்றார். பைந்தமிழ் கவிபாடி அத்தனை கோயில்களிலும் மங்களாசாசனம் செய்தார். மொத்தமாக 1253 பாடல்களை தெய்வத்தின் மீது பாடியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்திய கிரிநாதர் பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளார், அங்கே பாடல்கள் பாடியுள்ளார் இக்கோவிலை குடைவித்தவர்  முத்தரையர் மன்னராவார்.

திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில், இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில், சீர்காழி ஒன்றியத்தில் வேதராஜபுரத்தில், தீர்த்தவாரி மஞ்சள் நீர் குளியலுக்காகவும் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது, கருடசேவை நிகழ்ச்சியின்போது திருநகரில் இருந்து அவர் பிறந்த திருநாங்கூர் கொண்டு வந்து தங்க வைத்து தீர்த்தவாரி நடைபெறுகிறது. திருவாழி பகுதியில் ஏராளமான முத்தரையர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். நான்கு நாட்களில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை திருமங்கை ஆழ்வாரை தூக்கி சென்று சேர்ப்பதை முத்தரையர் மட்டுமே முழு உரிமையுடன் செய்கின்றனர்.

பழங்காலம் தொட்டு இன்று வரை திருமணங்கொல்லை என்ற கிராமத்தில், பங்குனி மாதம் "வேடுபறி விழா" நடத்தி வருகின்றனர். இந்த வேடுபறி நிகழ்ச்சியில் "முத்தரையர்க்கு பரிவட்டம் கட்டி" கோயிலில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது. இந்தச் சமயம், திருமங்கை ஆழ்வாரரைம், பெருமாளையும் சுமந்து செல்லும் வழக்கம் முத்தரையர் மட்டுமே ஆகும்.

இதேபோல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழா தொன்றுதொட்டு இன்றுவரை வைகாசி மாதம் நடைபெறுகிறது. இங்கேயும் முத்தரையர் மக்களுக்கு பரிவட்டம் கட்டி கோயில் மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இங்கே முத்தரையர் மக்கள் மண்டபம் கட்டி சாமியை இங்கே கொண்டுவந்து வேடுபரி நிகழ்ச்சி நடத்துகின்றனர். "ஸ்ரீ திருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம்" என தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்கு கல்வெட்டில் பெயர் பொறித்துள்ளனர்.

திருவரங்கத்தில் வேடுபரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருமங்கை ஆழ்வார் பிறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த திரு பெரியண்ணன் முத்தரையர். அறங்காவலர் துறையினரால் மரியாதைகள் செய்விக்கப்பட்டு கவுரவிக்கப் படுகிறார், இவரது குடும்பத்தில் ஒருவர் திருமங்கை மன்னன் வேடமிட்டு கையில் வாள் ஏந்தி வர, மேளதாளத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் நோக்கி வருகின்றனர், கோவிலின் முழு மரியாதையுடன் வேடுபறி விழா முடிவு பெற்று, மீண்டும் பெரியண்ணன் மற்றும் அவர் சார்ந்தோரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் பழக்கம் இன்றும் நடைபெறுகிறது. இந்த நடைமுறை திருமங்கை ஆழ்வார் முத்தரையர் என்பதற்குச் சான்றாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SITHAN_SHIVAMARI/மணல்தொட்டி&oldid=3845959" இலிருந்து மீள்விக்கப்பட்டது