பயனர்:Pandimari

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

PASUMPON MUTHURAMALINGA THEVAR HISTORY


திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறு

தேவர், முஸ்லிம்கள் மீது வைத்த பாசம்

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர்.

முஸ்லிம் பெருமக்களால் "தேவர் மகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.

காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார். அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார். ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸார்(சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.

நடு இரவில் ஒரு வில்லு வண்டியில் நீண்ட ஜிப்பா, அடர்ந்த தாடி, தலையில் சிவப்பு துருக்கிக் குல்லாவுடன் ஒருவர் வந்து இறங்கி ஆயிஷாபீவியின் உடலைப் பார்த்துவிட்டு மறுகணமே அடுத்த வில்லு வண்டியில் ஏறித் தலைமறைவானார். முஸ்லிம் பெரியவர் வேடத்தில் வந்தவர் தேவரய்யாதான் என அவர் தப்பிச் சென்ற பின்புதான் புலனாய்வுத் துறை போலிஸாருக்குத் தெரியவந்தது.

தமக்குப் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பீவீக்கு, தமக்கு ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும் தேவர் மகன் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வந்து மரியாதை செலுத்தினார் என்ற வரலாற்றை நான் அந்த விழாவில் உணர்ச்சி ததும்ப எடுத்துச் சொன்னதும், தேவர் இன மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தேவரய்யாவைப் பற்றி எங்களுக்கே இன்று வரை தெரியாத வரலாற்றைச் சொன்னதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்து

என்னைக் கட்டித் தழுவினார்கள்.

தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார்..

தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீரமாக எதிர்த்தார்..

தேவர், முஸ்லீம்களை வெறுத்தவர்களை வெறுத்தார்..

"சரித்திரச் சாலையின் சந்திப்புகள்' என்ற நூலில் ஆசிரியர்

"முஸ்லிம் குரல்' ஹாஜி

உன்மையை உரக்க கூறிய நன்பருக்கு நன்றி:- Morsi Mishal

தேவரைப் பற்றி பொய்யான வரலாறை திரித்து தேவரை சாதி வெறியராகவும், மதவெறியர்களாகவும் காட்டும் கயவர்களுக்கு இந்த பதிவு

------------------------------------------------------------------------------------------------------------------

"பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் இறப்பு ஓர் சரித்திர நிகழ்வு. அந்த சரித்திரத்தைப் பற்றி அனைவருமே தெரிந்து கொள்ளுங்கள்:"

************************************************

"1) தேவர் மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்."

"2) உடல் நிலை மோசம் அடைந்தது அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி காலமானார்."

"3) கடைசி விருப்பம் என் உடலை சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்."

"4) அதன்படி மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது."

"5) தேவர் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது."

"6) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணிர் அஞ்சலி செலுத்தினர்."

"7) கள்ள நாட்டைக் காத்த கர்த்தாவே எங்களை அனாதை ஆக்கிவிட்டுப் போய்விட்டாயா? என்று தாய் ஒருத்தி தலையில் அடித்துக் கொண்டு கீழே விழந்து புரண்டு அழுதது அனைவருடைய கண்களையும் குளமாக்கிவிட்டது."

"8) தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளும் காங்கிரஸ் கொடி உட்பட நடுக்கம்பத்தில் பறந்தது."

"9) தமிழகத்தில் உள்ள மக்கள் ரயில்களிலும், பஸ்களிலும், லாரிகளிலும், கார்களிலும் சாரை சாரையாகப் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தேவரது தெய்வ உடலை காண்பதற்கு."

"10) மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிற வகையில் மாலை அணிவிக்க வருகிறவர்களை போலீசார் கியூவில் நிற்க வைத்தனர்."

"11) தேவரை காண வந்த மக்கள் கூட்டமத்தின் வரிசை (அந்த கியூ) மூன்று மையில் நீளம் இருந்தது. மேலும் கியூ கூடிக்கொண்டே இருந்தது.."

"[30. 10. 63] மாலை ஊர்வலம் புறப்படும் வரை மாலைகள் அணிவித்ததுக் கொண்டும் அஞ்சலி செலுத்திக் கொண்டும் இருந்தனர்.

13) எங்கும் அழுகுரல் யாருமே இரண்டு நாளும் பச்சைத் தண்ணீர்கூட குடிக்கவில்லை."

"14) பசும்பொன்னில் எறத்தாழ 10 லட்சம் மக்கள் அந்த சிறிய கிராமத்தில் கூடி தெய்வத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.."

"15) அங்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டு எல்லா அரசியல் கட்சித் ததலைவர்களும் "மக்கள் உள்ளத்தில் தேவர் நீக்கமற நிறைந்து விட்டார்" எனக் கூறினர்."

"[30.10.63] அன்று மாலையில் தேவரது தெய்வ உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வைத்துக் பசும்பொன் கிராமத்தில் ஊர்வலமாகச் சென்று மீண்டும் தேவர் வீட்டுக்கே கொண்டு வரப்பட்டது."

"17) தேவர் புளிச்சிகுளத்தில் தேவரது எஸ்டேட்டில் அன்புடன் வளர்த்த இரண்டு மயில்கள் தேவரது உடல் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலம் வருகிறபோது உயரப் பறந்து சத்தமிட்டு கூவிக்கொண்டே வந்தது. அனைவரும் அந்த மயில்கள் கத்திக் கதறுவதைக் கண்டு கண்கலங்கினர். அதன்பின் தேலரது உடல் யோகிகளை அடக்கம் செய்யப்பட்டது. தேவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதும் அந்த மயில்கள் இரண்டும் பொத்தென்று கீழே விழந்து இறந்தது."

"18) இறுதி ஊர்வலத்தில் பல முக்கியத் தலைவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்."

"19) ஊர்வலம் தேவரின் தோட்டத்தை அடைந்தது அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது."

"20) பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறிய மகான்."

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pandimari&oldid=2770822" இலிருந்து மீள்விக்கப்பட்டது