பயனர்:MK Kumar77

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர், எழுத்தாளர்[தொகு]

எம்.கே.குமாரின் சொந்த ஊர் தமிழ்நாடு,  புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர். சென்னை தரமணியில் அமைந்துள்ள இரசாயன பட்டயக்கல்வி நிலையத்தில் 1993-1996வரை பட்டய்ப்படிப்பு முடித்து, 2002 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர். ஆஸ்திரேலிய நியுகாஸு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்று சுற்றுப்புற மேம்பாடு பட்டம் பெற்று பாதுகாப்பு முதன்மை அதிகாரியாக பணிபுரியும் சிங்கப்பூரர்.

”மருதம்” & ”5.12PM" சிறுகதை தொகுப்புகள் & "சூரியன் ஒளிந்தணையும் பெண்" கவிதை தொகுப்பு, "நதிமிசை நகரும் கூழாங்கற்கள்" - சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு 'பசு மரத்தாணி' எனும் குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு காலச்சுவடு நடத்திய சிறுகதைப்போட்டியில் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MK_Kumar77&oldid=2438351" இலிருந்து மீள்விக்கப்பட்டது