பயனர்:Kilakaraimohan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

==எழில்மிகு கீழக்கரையும் நானும்== என் பெயர் மோகன்.வீரத்திற்கும், அன்பிற்கும், கொடைக்கும் பெயர்போன மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை என்னும் சிற்றூர் தான் எனது சொந்த ஊர். சீலா மீன், துதல்,மைசூர்பாகு போன்றவை எங்கள் ஊருக்கே உரித்தான தனிச் சிறப்பு. ஆரம்பப் பள்லி முதல் பொறியியல் கல்லூரி வரை எங்கள் ஊரில் உண்டு. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளவர்கள் வாழும் ஊர் என்ற பெருமையைப் பெற்றது. பல மதங்களைச் சார்ந்த மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழும் ஊர். அழகிய கடற்கரை,மாணிக்கவாசகரால் பாடப்பெற்றுள்ள திருக்கோவில், எழில்மிகு பள்ளிவாசல், பழம்பெரும் கத்தோலிக்க தேவாலயம் போன்றவை கீழக்கரையின் பெருமையை இன்றும் பறைசாற்றுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kilakaraimohan/மணல்தொட்டி&oldid=1968410" இலிருந்து மீள்விக்கப்பட்டது