பயனர்:GoldenGowri
நம்முடைய கனவுகளை நாம் நிஜமாகவே எப்படிப் பிடிக்கிறோமோ இல்லையோ என்பது முக்கியமில்லை. அவற்றை அக்கைறயோடு பின்தொடர்ந்து சென்றாலே போதும் நம் வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். முன்னேற்றங்களைப் பார்க்க முடியும். சரி, நான் என்னுடைய கனவுகளைத் துரத்துகிறேன். அப்போது வழியில் ஒரு தடை எதிர்பட்டால் கவலையே வேண்டாம். நமக்கு உண்மையிலேயே நம்முடைய கனவின்மீது நம்பிக்கை, ஆசை, வெறி இருந்தால் எப்படியாவது கஷ்டப்பட்டு அந்தத் தடையைத் தாண்டி முன்னேற முயற்சி செய்வோம்.