பயனர்:Dr.P.Saravanan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் ப. சரவணன் சென்னையில் 14.11.1978ஆம் ஆண்டு பிறந்து தமிழகத்தின் பல ஊர்களில் வளர்ந்து மதுரையில் நிரந்தரமாகக் குடியேறியவர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு : ‘அ. முத்துலிங்கம் கதைகள் திறனாய்வு’ என்பதாகும்.

இவருடைய கவிதைகளை ‘மழைக்காலப் பாடகனும் மழையிசையும்’ என்ற தலைப்பில் தொகுத்து நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டது. வெகுஜன இதழியல் என்ற நூல் 2007இல் மதுரை சுபமி பதிப்பகம் வழியாக வெளிவந்தது.

வடக்குவாசல்’ இதழில் தொடர்ந்து தமிழின் சிறந்த சிறுகதைகளை அறிமுகப்படுத்தி அதுதொடர்பான கட்டுரைகளை எழுதினார். மகத்தானபுனைவுகள் என்ற தலைப்பில் தொடர்எழுதிவருகின்றார். தற்போது திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். அக்கல்லூரி வெளியிடும் ‘விடியல்’ என்ற மாத இதழுக்கு இணையாசிரியராக உள்ளார். tamilwriter.saravanan@gmail.com 9894541523

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr.P.Saravanan&oldid=2464363" இலிருந்து மீள்விக்கப்பட்டது