பயனர்:Balamurugansiramam
ஒய்யாமரத்தான் கோவில், சிரமம். இக்கோவில் சிரமம் கிராமத்தில் சிவகங்கை செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோவில் பழங்கால முறையான கழுமரம் வழிபாடு தழுவியது. இத்தகைய வழிபாடு குறிப்பிட்ட இன மக்களின் வழி வந்தவர்கள் வழிபாடு செய்து வந்தனர் இப்பொழுது மீண்டும் அதை புதுப்பிக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோவிலில் வாழ்ந்த முன்னோர்கள் இங்கு தெய்வமாக மக்களுக்கு காட்சி அளித்து ஆசி வழங்கி வருகின்றன. இக்கோவிலில் சிறப்பாக மார்கழி மாதம் மற்றும் மாசி மாதம் சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது இங்கு பழங்கால முறையான படையல் இட்டு பூஜை செய்தல் சிறப்பாக நடைபெறும் மற்றும் சேவல் பலியிடுதல் போன்ற வேண்டுதல்கள் இக்கோவிலின் சிறப்பாகும். நினைக்கும் காரியம் அனைத்தும் வெற்றி பெறுவதாகும் வேண்டும் வரம் கிடைப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.