பயனர்:BASKAR.RK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர்[தொகு]

ஆத்தூர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம் . இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் . இங்கு அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் நெல் , தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும் . இங்கே அதிகமாக காணப்படும் மரங்கள் மா , வாழை , தென்னை ஆகும் . இங்கு அதிகமாக காணப்படும் விலங்குகள் காட்டுப்பன்றி , சிறுத்தை , குரைக்கும் மான் , முள்ளம்பன்றி , குரங்கு , இந்திய காட்டெருமை ஆகும் . இவ்வூரின் சிறப்பு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது மற்றும் காமராஜர் நீர்த்தேக்கம் இவ்வூரின் சிறப்பு . அதுமட்டுமின்றி இங்கு ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது அதுதான் குடகனாறு ஆரம்பம் . குடகனாறு ஊரில் தொடங்கி பல ஊர்கள் வழி சென்று கடைசியில் காவிரியை அடைகிறது . இங்கு பழமை வாய்ந்த கோயில்கள் நிறைய காணப்படுகின்றன . இங்கு பலதரப்பட்ட மக்கள்கள் வாழ்கின்றனர் . இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு பிரத்தியேக இடம் உள்ளது அங்கிருந்தபடி இவ்வூரின் இயற்கையை ரசிக்க முடிகிறது .

இந்த ஊரின் சிறப்புகள் :[தொகு]
  • காமராஜர் நீர்த்தேக்கம்
  • நீர்வீழ்ச்சி
  • பழமைைை வாய்ந்த கோயில்கள்
காமராஜர் நீர்த்தேக்கம் :[தொகு]

இந்த நியூ தேகமானது காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது . இந்த நீர்த்தேக்கம் ஆனது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது . காமராஜர் நீர்த்தேக்கம் ஆத்தூரில் இருந்து 6 கிலோமீட்டர் மேற்கே 400 ஏக்கர் பருவமழை உண்ணும் நீர் நிலையாகும் . இங்கு வருடா வருடம் பல நாடுகளில் வாழும் அரிய வகை பறவைகள் (160 வகை ) இங்கு வருகின்றன . இந்த நீர் தேக்கத்தில் குளிக்க தடை இல்லை . நீர்த்தேக்கத்தில் பரிசல் மூலம் சென்று மீன்கள் பிடிக்கப்படுகின்றன . இங்கே ஒவ்வொரு ஞாயிறும் காலை 5 மணிக்கு பிடிக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுகின்றன . இந்த காமராஜர் நீர் தேக்கம் தான் ஆத்தூரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது . இந்த நீர்தான் பாசனத்திற்கு பயன்படுகிறது .

நீர்வீழ்ச்சி :[தொகு]

இந்த நிகழ்ச்சியானது மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகிறது . இந்த நீர்வீழ்ச்சி தான் குடகனாற்றின் அடித்தளமாக உள்ளது .


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:BASKAR.RK/மணல்தொட்டி&oldid=2811423" இலிருந்து மீள்விக்கப்பட்டது