பயனர்:Ahil sabasivam
அகில் பெயர் : சாம்பசிவம் அகிலேஸ்வரன் புனை பெயர் : அகில் பிறப்பிடம் : சரவணை, யாழ்ப்பாணம் வதிவிடம் : கனடா தொடர்புகளுக்கு :E-mail : writer.ahil@gmail.com
படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு.
படைப்புக்கள்:-
நாவல்கள்:
• திசைமாறிய தென்றல் - 2000 • கண்ணின் மணி நீயெனக்கு - 2010
குறு நாவல்:
• மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - 2012 - குங்குமசிமிழ்
சிறுகதைத் தொகுப்பு:
கூடுகள் சிதைந்தபோது - 2011
ஆன்மீக நூல்கள்:
•நமது விரதங்களும் பலன்களும் -2002 •இந்து மதம்: மறைபொருள் தத்துவ விளக்கம் - 2004
வெளிவர இருக்கும் படைப்புக்கள்:-
•முகவரி - கவிதைத் தொகுப்பு
விருதுகள்:
பதவி உயர்வு - ஞானம் சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - பரிசு - 2009
பெரிய கல்வீடு - அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுதைப் போட்டி – ஆறுதல்பரிசு - 2010
வலி - ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு – 2010
கூடுகள் சிதைந்தபோது – முதலாம் பரிசு – ஞானம் சஞ்சிகை நடாத்தும் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2010
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு - மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது - 2011
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு - சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு. சமுத்திரம் விருது - 2011
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு - "இலக்கிய விருது" - புதுவை நண்பர்கள் தோட்டம் - 2012
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு - கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது - 2012
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு - கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது 2012
'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்புக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி விருது -2012
கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்புக்கு - தமிழ் நாடு அரசின் 'அயலகப்படைப்பிலக்கியத்திற்கான விருது' - 2011
'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்புக்கு - துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது' - 2012
இவர் பற்றி:
இவருடைய படைப்புக்கள் இந்திய ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது, ராணி வாரமலர், ஈழத்து வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஞானம், உண்மை, முரசொலி, கனடா உதயன், செந்தாமரை, ஈழநாடு, கனடா முரசொலி, தமிழ்டைம்ஸ், தமிழ்பூங்கா என்பவற்றில் வெளிவந்துள்ளன.
உலகத் தமிழ் எழுத்தாளர்களுடைய விபரங்களை ஒன்று திரட்டி, அதனை இணையத்தளத்தில் ஆவணப்படுத்தும் முகமாக எழுத்தாளர் இணையத்தளம், அதாவது தமிழ்ஆதர்ஸ்.கொம் (www.tamilauthors.com) என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறார்.