பயனர்:மு.பக்ருன்னிசா/மணல்தொட்டி
கீழ்வரும் பொன்மொழிகள் திரு.கோபிநாத் அவர்கள் எழுதிய ”ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க !” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கின்றவன் அதை வெளியே தேடிக் கொண்டிருக்கமாட்டான்.அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. நம் அக்கறை சிரிக்கக்கூடாது என்பதில் இல்லை…..உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது. ஒரு வேலையை விரும்பிச் செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை.வருந்திச் செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மங்காகிறது. உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துகளை வைத்துக்கொள்வதில் குறையொன்றுமில்லை. வம்படியாய் எந்தச் சூழலிலும் அதை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டுவிட்டு எல்லாரும் போய் விடுவார்கள். என்னவாக வேண்டும் என்பதில் கூட தெளிவில்லாத ஒருவருக்கு யாரால் உதவி செய்ய முடியும்.நான் ஆசைப்படுகிறது எதுவுமே நடக்கிறதில்லை என்பவர்களை இறுக்கிப் பிடித்துக் கேட்டால் அவர்களது எல்லா ஆசைகளும் மங்களாகவே இருக்கும்…..தெளிவானதாக இருக்காது. இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகிற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். எல்லாரையும் நம்புவது ஆபத்து;யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. இழந்ததைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இருப்பதை கவனிக்கத் துவங்கினாலே நீங்கள் பழைய நிலைக்கு செல்லும் பாதையின் முதல் படியை தொட்டு விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்…..இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள்
123345
245567 [2]