பயனர்:முனைவர் நா.பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிறப்பு[தொகு]

முனைவர் நா.பிரபு (பிறப்பு: மே 16, 1984, சு.பொலக்குணம், கீழ்ப்பென்னாத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்) பெற்றோர் க.நாகராஜ் - வள்ளி, தற்பொழுது விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வசித்து வருகிறார்.

கல்வி[தொகு]

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்றவர்.

‘செஞ்சி வட்டார வழக்காறுகள் – மொழியியல் ஆய்வு’ என்னும் பொருண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

எழுதிய நூல்கள்[தொகு]

இவர் எழுதிய ‘நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மரபும் மாற்றமும்’ (2015) ‘விந்தன்’ (2016) ஆகிய நூல்கள் முறையே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகள் சார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, தேசியக் கருத்தரங்குகளில் பங்குபெற்று முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

விருதுகள்[தொகு]

தமிழ்ச்சுடர், இதயக்கனி, புதுவையின் நன்முத்து, கலைமணி, ஆய்வுலக அறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

கல்விப்பணி[தொகு]

பில்கேட்ஸ் கல்வியியல் கல்லூரி - செஞ்சி, கே.இ.சி. கல்வியியல் கல்லூரி - திருவண்ணாமலை, கிருஷ்ணவேணியம்மாள் கல்வியியல் கல்லூரி - விழுப்புரம், இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி - தெள்ளார் ஆகிய கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தற்பொழுது திருவண்ணாமலை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை (ம) தமிழாய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராகவும் ஆய்வாளர்களுக்கு ஆய்வுநெறியாளராகவும் இருந்து வருகிறார்.

பதிப்புப் பணி[தொகு]

‘யாழ்மாறன் பதிப்பகம்’ எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை 08.02.2017 அன்று முதல் நடத்தி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:முனைவர்_நா.பிரபு&oldid=3085119" இலிருந்து மீள்விக்கப்பட்டது