பயனர்:ப.பலவேசமுத்து
ப.பலவேசமுத்து[தொகு]
1969 ஆம் ஆண்டு ஆனி மாதம் பற்பநாத பெருமாள் நாடாருக்கும் பத்திரகாளி அம்மாளுக்கும் ஐந்தாவது குழந்தையாக குமிளம்பாடு (தற்போதைய சிங்காரத்தோப்பு) என்ற ஊரில் பிறந்தார்.
சிறுவயதில் களக்காடு அருகிலுள்ள புளியங்குளம் என்னும் ஊரில் வளர்ந்தார். கடனுக்காக சொத்துக்களை இழந்து 1976 /77 ஆம் ஆண்டு வாக்கில் புளியங்குளத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தந்தையாரின் தொழில் ஏற்பட்ட தேக்க நிலையால் பல ஊர்களில் வாழ நேரிட்டாலும் 1985 ஆம் ஆண்டு மீண்டும் சிங்காரத்தோப்பு ஊருக்கே திரும்பி வந்து விட்டார். பள்ளிப்படிப்பில் பெரும் பகுதியை அரசு மாணவர் விடுதியிலிருந்தே முடித்தார். பின்பு இளங்கலை அறிவியலில் வேதியியலையும், தொழில் நுட்பத்தில் அளவீட்டுப் (கருவி) பொறியியலையும் கற்று தேர்ந்தார்.