பயனர்:ப்ரித்தி சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி௫ச்சியின் வரலாறு :

வரலாறு: சோழர்கள் காலத்தில் வளம் பெற்றிருந்தது திருச்சி என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி. கி.பி. முதலாம் நூற்றாண்டின்போது, பல்லவர் மற்றும் பாண்டியர் கைகளுக்கு திருச்சி மாறியது. கி.பி. 10-வது நூற்றாண்டின்போது மீண்டும் சோழர் கைக்குத் திரும்பியது. சோழர்கள் தங்கள் பலம், செல்வாக்கு, ஆட்சி ஆகியவற்றை இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சி சென்றது. கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சியை கைப்பற்றும் வரை விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது. திருச்சி நகரம், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் வடிவமைத்துக் கட்டப்பட்டவை