பயனர்:பேரா.சு.தளபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராசிரியர் சு. தளபதி, நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்காரர். பொதிகையிலும் மதுரையிலும் தமிழிலக்கியம் பயின்றவர். தற்போது சென்னை எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 'பதம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்துகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர். மாணவராக இருக்கும் போதே, 'பொதிகைத்தென்றல்' என்ற அச்சு இதழை நடத்தியவர். கவிதை, சிறுகதை, கட்டுரைகள், எழுதி பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். சிறந்த ஆசிரியர், கவிபாரதி, அழ.வள்ளியப்பா சிறுவர் இலக்கிய விருது, டாக்டர் மு.வ. விருது உட்பட, பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். முருக வழிபாடு குறித்த ஆய்வாளர். நவீன இலக்கியத் திறனாய்வாளர். சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் தமிழிலக்கியக் கலைக்களஞ்சியத் திட்டத்தில் பணியாற்றியவர். நோபல் இலக்கிய மேதைகள், மாமனிதர்கள் உள்ளிட்ட ஏழு நூல்கள் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பேரா.சு.தளபதி&oldid=1319897" இலிருந்து மீள்விக்கப்பட்டது