பயனர்:பா.ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா.ராமமூர்த்தி 1973ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தவர். பட்டுக்கோட்டை அருகில் உள்ள பள்ளிகொண்டான் கிராமத்திற்கு தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னைக்கு குடிபெயர்ந்தவர். கவிதை, கட்டுரை எழுதக்கூடியவர். தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பத்திரிகைத் துறையிலும் பணியாற்றி வருகிறார். 2007 ஆம் ஆண்டு உலக சினிமா குறித்து ஒரு ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார். உலக சினிமா, மௌனம் கலைத்த சினிமா, சொல்லில் அடங்காத உலகம் ஆகிய நூல்களும் கைப்பிடியில் நழுவும் உயிர் என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.ராமமூர்த்தி&oldid=1933392" இலிருந்து மீள்விக்கப்பட்டது