பயனர்:பரமசிவம்.ப
பரமசிவம்.ப.அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.’தமிழில் ஒரு பக்கக் கதைகள்’என்னும் நூலின் ஆசிரியர்.குமுதம்,தினமலர் வாரமலர்,ராணி,ஓம் சக்தி போன்ற இதழ்களில் நூற்றி இருபதுக்கும் மேலான சிறு கதைகளைப் படைத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற போது,[1965]இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பதினைந்து நாட்கள் சிறைத் தண்டனை அநுபவித்தவர்.’பசி’என்னும் புனை பெயரில் இவரின் பெரும்பாலான கதைகள் வெளியாகியுள்ளன.
இவரின் சிறுகதைத் தொகுப்புகள்:
1.பசியோ பசி 2.ஓடிப் போனவள்
ஆய்வு நூல்:
1தமிழில் ஒரு பக்கக் கதைகள்