பயனர்:கட்டப்பா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

0[தொகு]

https://ta.wikipedia.org/s/66z2 [[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

1[தொகு]

ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகள்!

இரண்டு தலைநகரங்கள் : ஜம்மு-காஷ்மீருக்கு இரு வேறு தலைநகரங்கள் உள்ளன. அதில் கோடையில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இருக்கும்.

ஆர்டிக்கிள் 370 :ஆர்டிக்கிள் 370 என்னும் சிறப்புச் சட்டம் காஷ்மீரில் மட்டும் உள்ளது. அது என்னவெனில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இம்மாநிலத்தில் நிலங்களை வாங்க முடியாது.

பல்வேறு மத மக்கள் : இம்மாநிலத்தின் காஷ்மீர் பகுதியில் முஸ்லீம்களும், ஜம்மு பகுதியில் இந்துக்களும், லடாக் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் உள்ளனர்.

எல்லைகள்  : ஜம்மு மற்றும் காஷ்மீர் சீனா மற்றும் பாகிஸ்தானை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இருவேறு நாடுகளின் எல்லைகளைக் கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது ஜம்மு-காஷ்மீர் தான்.

தனிக்கொடி: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கு இல்லாத ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது. அது இம்மாநிலத்திற்கு என்று தனிக்கொடி இருப்பது.

2[தொகு]

பண்டையத் தமிழர் அணிகலன்கள் பண்டைய காலத்தில் அழகு என்பது ஒன்றுக்கு இருக்ககூடிய ஒரு பண்பியல்பு. அதை மனிதர் உணர்வது ஒரு மகிழ் அனுபவம். அந்த வகையில் "அழகியல்" என்பது அழகை உருவாக்கும். அல்லது வெளிப்படுத்தும், ரசிக்கும் ஓர் அணுகுமுறையைச் சுட்டுகிறது.ஓவியம்,இசை,கதை,கவிதை,சிற்பம்,கட்டிடம்,மெய்யியல்,நுட்பம் என்று அனைத்திலும் அழகியல் இருக்கும். இத்துறைகளில் தமிழர் அழகை ஆக்கும் வெளிப்படுத்தும் ரசிக்கும் அணுகுமுறையைத் தமிழர் அழகியியல் குறிக்கின்றது. தமிழர் அழகியலில் அணிகலன்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம் தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம்,மரகதம்,மாணிக்கம்,புட்பாரகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம், முத்து,பவளம்) ஆன அணிகலன்களையே நம் தமிழ் மக்கள் அதிகம் விரும்பி அணிந்து உள்ளனர். அவற்றிற்கு அப்படி ஒரு மதிப்பைக் கொடுத்து உள்ளனர். அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இவ்விரண்டையும் குறிக்கும். இப்படியாகத் தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம். பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று அமெரிக்க டாலர் ஒழுங்குடைமை இருப்பதால், இந்த செயற்பாடு அல்லது வழக்கம் வருவாய் ஈட்ட தடையாக இருப்பதாகவும் பொருளியல் அறிஞ்ர்கள் சிலர் கருதுகின்றார்கள். தமிழர் அணிகலன்கள் வரலாறு முகலாயர்கள்,ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும்,பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி,அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர். அத்துடன் உடைக்கு பதிலாக ஆண்களும், பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள். நகை அணி வகைகள் : தமிழர்களின் நகை அணிகள் அல்லது வகைகள் கீழ்காணும் பல்வேறு விதமாக வகைப்படுத்தப் படுகின்றன. அவைகள் தலை அணிகளே, காதணிகள், கழுத்தணிகள், இடையணிகள், கையணிகள், விரலணிகள், காலணிகள் ஆகும். தமிழர்கள் அணிந்து வந்த நகைகளின் பெயர் பின்வருமாறு : தலையணி தலையணி என்பன தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப்பூ, அடுக்குமல்லிப்பூ, இலை, அரசிலை, இராக்குடி, இலம்பகம், கடிகை, கன்னசரம், குச்சம், குஞ்சம், கொண்டைத்திருகு, சந்திரப்பிரபை, சரம், சுடிகை, சுட்டி, சுரிதம், சூடிகை, சூடாமணி, சூடை, சூட்டு, சூரியப்பிரபை, சூழி, சூளாமணி, சேகரம், சோருகுப்பூ, தலைப்பாளை, தெய்வ உத்தி, தலைப்பட்டம், பதுமம், பிறை, புல்லகம், பூர்ப்பாளை, பொலம்பூந்தும்பை, பொற்பூ, பொற்றாமரைப்பூ, பொன்வாகை, பொன்னரிமாலை, மாராட்டம், முகசரம், முஞ்சம், வயந்தகம், வலம்புரி, திருகுபூ போன்றவையே. காதணி : காதணிகள் என்பன தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், டோலக்கு, தண்டட்டி போனறவையே. கழுத்தணிகள் : கழுத்தணிகள் என்பன கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை பவளத்தாலி போன்றவை. அதுபோலப் புய அணிகலன்கள் என்பன கொந்திக்காய் என்று அறியப்படும். கை அணிகலன் என்பன காப்பு, கொந்திக்காய்ப்பூ போன்றவையாகும். கைவிரல் அணிகலன்கள் என்பன சிவந்திப்பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ போன்றவை ஆகும். கால் அணிகலன்கள் என்பன மாம்பிஞ்சுக் கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய்க் கொலுசு போன்றவை ஆகும். கால் விரல் அணிகலன்கள் என்பன கான் மோதிரம், காலாழி, பில்லணை, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பீலி, முஞ்சி, மெட்டி போன்றவை ஆகும். மேற்கண்ட அனைத்தும் பெண்களின் அணிகலன்கள் ஆகும். இனி ஆண் மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் பற்றி காண்போம்.