பயனர்:"vanniyarkootamaippu"/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.என். இராமமூர்த்தி
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சி
தலைவர்சி.என். இராமமூர்த்தி M.Com., B.L.,
அரசியல் நிலைப்பாடுவன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர்
இணையதளம்
https://vanniyarkootamaippu.com/
இந்தியா அரசியல்

சி.என்இராமமூர்த்தி இந்திய அரசியல்வாதி[தொகு]

சி.என்இராமமூர்த்தி (C.N Ramamurthy, பிறப்பு: பிப்ரவரி 14,1957) சமூகநீதிப்போராளியும், தமிழக அரசியல்வாதியும் முதுகலை வணிகவியல், இளங்கலை சட்டம் படித்தவர் 1980களில் வன்னியர் சங்க பொதுச்செயலாளர், பின்னாளில் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர்[1], அனைத்திந்தியபாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவனத்தலைவர். அனைவராலும் அன்போடு சி.என்.ஆர் என்று அழைக்கப்படுகின்றார். சி.என்இராமமூர்த்தி    M.Com., B.L.,

வரலாறு[தொகு]

இவர் 1957- ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம்தேதி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சூனாம்பேடு என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை நடேசக்கவுண்டர், தாயார் இரத்தினம்மாள் ஆவார். இவரது உடன்பிறந்தோர் இரண்டு சகோதரர் ஆவார்கள்.

கல்வியும் தொழிலும்[தொகு]

முதுகலை வணிகவியல் இளங்கலை சட்டப்படிப்பில் ( M.Com., B.L.,) பட்டம் பெற்றார் சி.என்இராமமூர்த்தி. 1970களில் தன் மாணவபருவ முதலே சமூக அக்கறை கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிமை குரல் கொடுத்து தீர்வுகண்டவர். பின்னாளில் 1980ல் தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உரிமையை மீட்டெடுப்பதற்கான பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர், அந்நாளில் வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தார். அப்பொழுது 1989ல் வன்னியர் உட்பட 108 ஜாதிகளை ஒன்றிணைத்து MBC 20% ஒதுக்கீடு[2] வழங்கப்பட்டது அப்பொழுது முதல்வர் கலைஞர் உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

மக்களின் முன்னேற்றத்திற்காக சி.என்.இராமமூர்த்தி ,வாழப்பாடியார், வன்னியர் அடிகளார் ஆகியோர் இணைந்து வன்னியர் முன்னேற்றசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இதன் மூலம் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து பல நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். வாழப்பாடியார் மற்றும் வன்னியர் அடிகளார் இறப்பிற்கு பின் வன்னியர் சத்திரியர் சங்கம் சி.என்.ஆர் ஏற்படுத்தினார். அதன்பின் சி.என். இராமமூர்த்தி அவர்கள் சிதறி கிடந்த பல்வேறு வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து வன்னியர் கூட்டமைப்பு என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். இதன்மூலம்  2010ல் வன்னியர் மக்களின் மேம்பாட்டிற்காக முத்தான மூன்று வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார்.

  1. வன்னியர் பொதுசொத்து நலவாரியம் (W.P.NO 26565/2011)
  2. வன்னியர் உள்ஒதுக்கீடு (W.P.NO.14025/2010)
  3. வன்னியர் நலவாரியம் (W.P.NO.20544/2012)

இதன் இறுதி தீர்ப்பிற்குபின் 2018 ல்வன்னியர் பொதுசொத்து நலவாரியம் 44வது சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2021 வழங்கப்பட்ட வன்னியர் உள்ஒதுக்கீடு  10.5% சி.என்.ஆர் தொடுத்தவழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட இறுதி ஆணையையும் GO. NO 35/2012 பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை பின்பற்றிவழங்கப்பட்டது சில காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டாலும் இன்றளவும் சட்டப்படி போராடி வருகிறார். பின்னர்தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அனைத்திந்தியபாட்டாளி முன்னேற்றக்கட்சியை நிறுவினார்.

பணிகளும் பிற சேவைகளும்[தொகு]

1980களில் வன்னியர் ஒதுக்கீட்டிற்காக பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து தலைமைதாங்கியுள்ளார்.

1. NLCIL நெய்வேலி 3வது சுரங்கம் நிர்வாகம் நிலம் எடுக்கும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேலைவாய்ப்பு பொருளாதாரம் உயர என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டப்போராட்டத்தின் மூலமாக அறிவாயுதம் ஏந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து

(W.P.NO 26514/2023) நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் விதமாக தீர்ப்பை பெற்றுள்ளார்.

2.வன்னியர் மக்களின் நலனுக்காக 2010ல் வன்னியர் கூட்டமைப்பு சார்பாக உயர்நீதிமன்றத்தில் முத்தான மூன்று வழக்குகளை தொடுத்தார்.

வன்னியர் பொதுசொத்து நலவாரியம்  ( W. P. NO 26565/2011)[தொகு]

வன்னியர் பொதுசொத்து நலவாரியம் ( 240 வன்னியர் அறக்கட்டையில் ஒன்றிணைத்து சுமார் பத்து லட்சம் கோடி இதன் மதிப்பு ) நீதிமன்றத்தின் வாயிலாக அரிவாயுதம் ஏந்திபோராட்டம் நடத்தி நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்குபின் 2018இல் ஜனாதிபதியின் ஒப்புதலோடு 44வது சட்டமாக இயற்றப்பட்டது. இன்றளவும் இது சரிவர செயல்படாமல் இருக்கிறது இதற்கு அறிவாயுதம் ஏந்தி சட்டபோராட்டம் முன்னெடுத்து வருகிறார்.

வன்னியர்உள்ஒதுக்கீடு 10.5% ( W. P. NO.14025/2010)[தொகு]

வழக்கின் அடிப்படையில் அரசாணைஎண் 35/2012 வன்னியர்களுக்கு மட்டும் 15% உள்ஒதுக்கீடு 20 சதவீதத்திலிருந்து கேட்டு மன்றத்தில் வழக்குதொடுத்த பின் 2012ல் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று அரசாணைமற்றும் 2015ல் நீதிமன்ற இறுதி ஆணையைப்பெற்று அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட நலவாரிய ஆணையத்தின் 10.5 பரிந்துரையை பெற்று 2021இல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இப்பொழுது தவறான புரிதல் காரணமாக நீதிமன்றத்தின் மூலமாகதடைபட்டுள்ளது. மீண்டும் நடைமுறைப்படுத்த சி.என்.ஆர் அவர்கள்முதல்வர், அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் உரியதரவுகளை கொடுத்து மீண்டும் ஒதுக்கீடு செயல்படுத்தவேண்டும் என்றகோரிக்கையை விடுத்துள்ளார் இதன்படி கூடியவிரைவில் 10.5% நிச்சயம் கிடைக்கபெற அறிவாயுதம் ஏந்தி இன்றளவும் போராடிவருகிறார்.

வன்னியர்நலவாரியம்( W. P. NO.20544/2012)[தொகு]

வன்னியர் மக்களின் வாழ்வாதாரத்தின் மேம்பாட்டிற்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் தனியேநிதி ஒதுக்கி மக்களின் வாழ்வாதாரத்திற்காக செயல்படுத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்டுள்ளார் இதனை செயல்படுத்த இன்றளவும் அறிவாயுதம் ஏந்தி போராடி வருகிறார்.

  1. {{cite web}}: Empty citation (help)
  2. {{cite web}}: Empty citation (help)