பன்னீர்க்குளம் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னீர்க்குளம் என்பது பனிநீர் பெய்யும் குளம். காலை வேளையில் பனி பொழிந்துகொண்டிருக்கும். அப்போது குளத்திலுள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும். அதில் நீராடினால் உடலுக்கு நல்லது. இதனை உணர்த்தும் கருத்துக்கொண்ட பாடலோடு விளையாடப்படும் விளையாட்டு இது.

ஆடும் முறை[தொகு]

பட்டவர் நிற்பார். பழமேறியவர்கள் ஒளிந்துகொள்வர். பட்டவர் அவர்களில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பார். அவர் வந்ததும் பின்வரும் உரையாடல் நிகழும்.

எந்தக் குளத்தில் மூழ்கினாய்
தயிர்க்குளத்தில்
வீடெல்லாம் வெண்ணெயாய்ப் போச்சு போ போ

அடுத்தவரை அழைப்பார். பின்வரும் உரையாடல் நிகழும்.

எந்தக் குளத்தில் மூழ்கினாய்
பருப்புக் குளத்தில்
வீடெல்லாம் மஞ்சளாய்ப் போச்சு போ போ

அடுத்தவரை அழைப்பார். உரையாடல் நிகழும்.

எந்தக் குளத்தில் மூழ்கினாய்
பன்னீர்க் குளத்தில்
வா வா

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954