பசந்த குமார் பாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்த குமார் பாண்டா
Basanta Kumar Panda
பசந்த குமார் பாண்டாவின் உருவப்படம்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
களகாண்டி மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்அர்கா கேசரி தியோ
தொகுதிகளகாண்டி நாடாளுமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மே 1961 (1961-05-12) (அகவை 62)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்சுரபி பாண்டா
பிள்ளைகள்அபிநந்தன் பாண்டா, அபிசேக்கு பாண்டா
வாழிடம்நுவாபடா
தொழில்அரசியல்வாதி

பசந்த குமார் பாண்டா (Basanta Kumar Panda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1961 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று இலட்சுமி பிரசாத்து பாண்டாவின் மகனாக இவர் பிறந்தார். ஒடிசாவில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் இருந்தார். நுவாபாடா தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். நாடாளுமன்றத்திற்காக நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் தனது நெருங்கிய போட்டியாளரான புசுபேந்திர சிங் தியோவை தோற்கடித்து 17ஆவது மக்களவைக்கு களாகண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Basant Kumar Panda elected BJP's Odisha unit chief". 14 January 2016.
  2. "MLA Basanta Kumar Panda Profile | NUAPADA Constituency". www.naveenpatnaik.com. Archived from the original on 2019-01-13. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_குமார்_பாண்டா&oldid=3824522" இலிருந்து மீள்விக்கப்பட்டது