நெகிழிசை (செய்யுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெகிழிசை என்பது செய்யுட்களில் வல்லினம் விரவி வராமல் ஓரின எழுத்தே வருமாறு நெகிழத் தொடுக்கும் செய்யுள் ஓசையாகும்.

விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்
இரவுலவா வெலை ஒலியே - வரவொழிவாய்
ஆயர்வா யேஅரிவை ஆருயிரை ஈராகவோ
ஆயர்வாய் வேலியோ அழல்

இப்பாடலில் வல்லின எழுத்து வராமல் இடையினமாகிய ஓரினத்தாலேயே பாடப்பட்டதால் இது நெகிழிசை ஆயிற்று.

மேற்கோள்[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம், தண்டியலங்காரம். திருப்பனந்தாள் மட வெளியீடு.1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழிசை_(செய்யுள்)&oldid=959112" இலிருந்து மீள்விக்கப்பட்டது