நாவக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவக்குறிச்சி இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும். இவ்வூர் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தலைவாசல் என்ற ஊரிலிருந்து வடக்கே 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

இவ்வூராட்சியில் ஏறத்தாழ 5000 பேர் வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்கின்றனர். மிகுந்த எழுத்தறிவு விழிப்புணர்வு பெற்ற ஊர். ஏறக்குறைய 80 சதவீதம் மக்கள் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள். இவ்வூரில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன.

நாவக்குறிச்சியின் எல்லை கிராமங்கள்

வடக்கே - சிறுவாச்சூர் தெற்கே - தலைவாசல் கிழக்கே - புத்தூர் மேற்கே - மணிவிழுந்தான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவக்குறிச்சி&oldid=2815523" இலிருந்து மீள்விக்கப்பட்டது