நரிவிருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரிவிருத்தம் என்பது நிலையாமை கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும். இது 6-7-ஆம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்டது. "திருஞான சம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார்:

  1. எலி விருத்தம்
  2. கிளிவிருத்தம்,
  3. நரிவிருத்தம்",

இவற்றுள் நரிவிருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது.[1]

எடுத்துக்காட்டுப் பாடல்[தொகு]

இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல
வளமையும் வலிதுநில்லா வாழ்வுநாள் நின்ற அல்ல
களிமகள் நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வர்
அளவிலா அறத்தின் மிக்க யாதும் மற்(று)இல்லை மாதோ

-நரிவிருத்தம் 15

மேற்கோள்கள்[தொகு]

  1. நரிவிருத்தம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிவிருத்தம்&oldid=3588560" இலிருந்து மீள்விக்கப்பட்டது