தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் வேதாரண்யத்திற்கு வடக்கில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

கேட்ட வரத்தைத் தருபவராக அபீஷ்ட வரதராஜபெருமாள் மூலவராக உள்ளார். பிரம்மா இங்கு தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்று வேதங்களைக் கற்றதாகவும், பிரம்மாவுக்கு அதனை உபதேசித்தவராக பெருமாள் இருந்ததால் அவரை வேதநாராயணன் என்றும் அழைக்கின்றனர். சேதுமாதவன் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். [1]

சிறப்பு[தொகு]

ராமன் சீதையைத் தேடி தெற்கே சென்றபோது முதலில் வேதாரண்யத்தை அடைந்து இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை அமைத்து வழிபட்டதாகவும், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைப்பதற்காக திட்டமிட்டதால் இவ்விடம் ஆதிசேது என்ற பெயரைப் பெற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]