தேன்மிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடி குடுவையில் வைக்கப்பட்டுள்ள தேன்மிட்டாய்

தேன்மிட்டாய் அரிசி மாவினால் செய்யப்படும் ஓர் இனிப்பு வகையாகும். இது பொதுவாக வெளிர் சிவப்பு நிறத்திலும் உருளையாகவும் இருக்கும்.

செய்முறை[தொகு]

அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும். அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் (இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது).

அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் சேர்த்து, கலந்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும். உருண்டைகள் பொரிந்து மேலே வரும். பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும். ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். அவ்ளோதான்.. சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

கவனிக்க[தொகு]

உருண்டைகளை சீனிப் பாகில் போடுகையில் பாகு மிதமான சூட்டுடன் இருக்க வேண்டும். ஒரு வேளை பாகு ஆறி விட்டால் உருண்டைகளை போடும் முன் மிதமான தீயில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்மிட்டாய்&oldid=3299697" இலிருந்து மீள்விக்கப்பட்டது