தி டூ ஜென்டில்மேன் ஆஃப் வெரோன
தி டூ ஜென்டில்மேன் ஆஃப் வெரோன (The Two Gentlemen of Verona) என்பது வில்லியம் சேக்சுபியரின் நகைச்சுவை நாடகம் ஆகும், இது 1589 மற்றும் 1593 க்கு இடையில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது ஷேக்ஸ்பியரின் முதல் நாடகமாக சிலரால் கருதப்படுகிறது, [a] மேலும் சில கருப்பொருள்கள் மற்றும் மையக்கருத்துகளை கையாள்வதற்கான பரிசோதனை முயற்சியாக இது பரவலாகக் கருதப்பட்டது. பின்னர் இவை விரிவாகக் கையாளப்பட்டது. உதாரணமாக, ஒரு கதாநாயகி ஒரு சிறுவன் போல உடையணிந்தது அவரது நாடகங்களில் இதுவே முதன்முறையாக இருந்தது. இந்த நாடகம் நட்பு மற்றும் துரோகம், நட்புக்கும் காதலுக்கும் இடையிலான மோதல் மற்றும் காதலில் உள்ளவர்களின் முட்டாள்தனமான நடத்தை ஆகிய கருப்பொருளைக் கையாள்கிறது.
சேக்சுபியரின் பலவீனமான நாடகங்களில் ஒன்றாக டூ ஜென்டில்மேன் பரவலாகக் கருதப்படுகிறது. [1] இது ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் மிகக் குறைவான நடிகர்களைக் கொண்டுள்ள நாடகம் ஆகும். [2]
கதை மாந்தர்கள்[தொகு]
- வேலண்டைன்- வெரோனவில் வாழும் இளைஞன்
- புரோடியசு- வேலண்டைனின் நெருங்கிய நண்பன்
- சில்வியா- மிலனில் வேலண்டைன் மீது காதல்வயப்பட்டவர்
- ஜூலியா- வெரோனாவில் புரோதியசு மீது காதல் வயப்பட்டவர்
- லூசதா -
- அந்தோனியோ- புரோதியசுவின் தந்தை
சுருக்கம்[தொகு]
நாடகம் தொடங்கும் போது, வேலண்டைன் தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக வெரோனாவை விட்டு மிலனுக்கு செல்ல தயாராகிறார். அவர் தனது நெருங்கிய நண்பரான புரோதியசை தன்னுடன் வருமாறு வேண்டுகிறார், ஆனால் புரோதியசு சூலியாவை காதலிப்பதனால் அவருடன் செல்ல மறுத்துவிட்டார். ஏமாற்றமடைந்த வேலண்டைன், புரோதியசிடம் இருந்து விடைபெற்று தனியாகச் செல்கிறார். இதற்கிடையில், ஜூலியா தனது பணிப்பெண் லூசெட்டாவுடன் புரோதியசைப் பற்றி விவாதிக்கிறார், அவர் சூலியாவிடம் , புரோதியசு தன்னை விரும்புவதாக நினைக்கிறார். இருப்பினும்,நாணத்தினால் சூலியா, அவரைப் பிடிக்கும் என்று ஒப்புக்கொள்வதில் தடுமாற்றமடைகிறார்.பின்னர், லூசதா ஒரு கடிதத்தினை எழுதி சூலியாவிடம் கொடுக்கிறார் ஆனால் இதனை வேலண்டைனின் பணியாள் இசுப்பீடு கொடுத்ததாக சூலியாவை கேலி செய்கிறார். லூசதாவின் முன் தன் காதலை வெளிப்படுத்த விரும்பாத சூலியா, கோபத்துடன் கடிதத்தைக் கிழித்து எறிகிறார். அவள் லூசெட்டாவை அனுப்புகிறாள், ஆனால் தனது அசாத துணிவினை உணர்ந்து கடிதத்தின் துண்டுகளை எடுத்து முத்தமிட்டு, அவற்றை மீண்டும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறார்.
நாள் மற்றும் உரை[தொகு]
நாள்[தொகு]
தி டூ ஜென்டில்மேன் ஆஃப் வெரோன உருவான சரியான நாள் தெரியவில்லை, ஆனால் இது சேக்சுபியரின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாக இருந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது. [3] 1598 இல் வெளியிடப்பட்ட பிரான்சிஸ் மெரெசின் பல்லாடிஸ் டாமியாவில் சேக்சுபியரின் நாடகங்களின் பட்டியலில் இந்த நூலிற்கான முதல் சான்று உள்ளது [4] ஆனால் இது 1590 களின் முற்பகுதியில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. உதாரணமாக, கிளிஃபோர்டு லீச் 1592/1593 இல் வெளியிடப்பட்டதாகக் கூறுகிறார்[5] ஜி. பிளேக்மோர் எவன்ஸ் 1590-1593 எனவும் [6] கேரி டெய்லர் 1590-1591 என்றும் பரிந்துரைக்கிறார்; [7] கர்ட் இசுக்லூட்டர் 1580களின் பிற்பகுதியைக் குறிப்பிடுகிறார்; [8] வில்லியம் சி. கரோல் 1590-1592 என்று பரிந்துரைக்கிறார்; [1] ரோஜர் வாரன் உத்தேசமாக 1587 இருக்கலாம் என்றும், ஆனால் 1590/1591 ஆக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார். [9]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Carroll (2004).
- ↑ Greenblatt et al. (2008).
- ↑ See (Leech 1969, ப. xxx), (Wells & Taylor 1997, ப. 109), (Carroll 2004, ப. 130) and (Warren 2008, ப. 26–27)
- ↑ Jackson (2005).
- ↑ Leech (1969).
- ↑ Evans (2007).
- ↑ Wells & Taylor (1997).
- ↑ Schlueter (1990).
- ↑ Warren (2008).
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found