தில்குசா விருந்தினர் மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்குசா விருந்தினர் மாளிகை (Dilkusha Guest House) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான விருந்தினர் இல்லமாகும். தெலுங்கான ஆளுநரின் வசிப்பிடமான ராச்பவனை ஒட்டியுள்ள சாலையில் இது அமைந்துள்ளது.[1] இது ஐதராபாத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டட அமைப்பாகும். மாநில விருந்தினர் மாளிகையாக இந்த இல்லம் பயன்படுத்தப்படுகிறது.[2]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சர் அக்பர் ஐதாரி ஐதராபாத்தில் இருந்த காலத்தில் இதை ஆக்கிரமித்ததாக அறியப்படுகிறது. இவர் வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணியைத் தொடங்கி 1938-42 ஆம் ஆண்டு வரை நிசாமின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது வாழ்க்கையை முடித்தார் என்றும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "New consulate in Hyderabad; no protectionism, says Bush". 4 March 2006.
  2. "DILKUSHA GUEST HOUSE". THE HINDU IMAGES. https://thehinduimages.com/details-page.php?id=6977087&highlights=KUMARA%20KRUPA%20GUEST%20HOUSE%20ROAD. பார்த்த நாள்: 14 August 2023.