திருக்களிற்றுப்படியார் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் என்னும் நூலுக்கு, 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூலே திருக்களிற்றுப்படியார் உரை[1] என்னும் இந் நூல்.. இந்த உரையை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. திருவுந்தியார் உரைநூலுக்கு உள்ள அத்துணைச் சிறப்புகளும் இந்த நூலுக்கும் உண்டு.

இதில் உள்ள செய்திகளில் சில[தொகு]

  • ஆசிரியரின் தீட்சை இல்லாமல் ஞான்ம் வராது.[2]
  • கருவிகளினாலே [3] சிவனைக் காணமுடியாது எனக் கண்டுகொள்க.[4]
  • ஆன்ம போதம் பெற்றவர் எந்தப் பாதத்தில் [5] இருந்தாலும் அதுவே ஞானம் தரும் எனக் கண்டுகொள்க [6]
  • ஞானிக்கு வினை [7][8] இல்லை [9]
  • பெத்தத்திலும்,[10] முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயல் இல்லை.[11]
  • சிவன் கிருத்தியம் [12] பண்ணான்.[13]

திருக்களிற்றுப்படியார் விளக்கம்[தொகு]

  • தில்லை நடராசப் பெருமான் சிற்சபைக்கு ஏறும் படிகள் துதிக்கையை உடைய யானையின் மத்தகம் யானைத்தலை போல இருப்பதால் இந்தப் படி திருக்களிற்றுப்படி. இந்தப் படியில் ஏறும் மன-வழியை மார்க்கத்தை விளக்கும் நூல் திருக்களிற்றுப்படியார்.
  • தன்மீது ஏறுவோருக்கு யானை தன் காலை மடக்கிப் படிந்து கொடுப்பது போலத் தன்னை நினைப்பவர்களுக்குச் சிவன் என்னும் களிறு படிந்துகொடுப்பதால் இது களிற்றுப்படி. களிறு இறைவன் ஆனதால் இது திருக்களிறு. 'ஆர்' நூலுக்குத் தரும் சிறப்பு விகுதி.[14]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. பாடல் 3 உரை
  3. ஐம்பொறிக் கருவிகளால் சிவனைக் காண முடியாது
  4. பாடல் 14 உரை
  5. இறைவனை அடையும் படிநிலைப் பாதங்கள்
  6. பாடல் 15 உரை
  7. நல்வினை, தீவினை
  8. இருள் சேர் இருவினையும் சேரா - திருக்குறள்
  9. பாடல் 42 உரை
  10. பெத்தம் = பிறவி
  11. பாடல் 43 உரை
  12. கிறுக்குத்தனம்
  13. பாடல் 78 உரை
  14. ஒப்புநோக்குக 'நாலடியார்'