தாய் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோலகா மாவட்டத்தில் தாய் குழு கூட்டம்

தாய் குழு (Aama Samuha) என்பது பாலின சமத்துவம், பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாள நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வக் குழுவாகும்.[1][2] இக்குழு கூட்டங்கள், கல்வி போன்ற பிரச்சனைகளை பெண்கள் பேசுவதற்கான ஒரு அரங்கமாகவும் செயல்படுகின்றன; சுகாதாரம் மற்றும் உடல்நலம்; பெண் அதிகாரம்; மற்றும் இனப்பெருக்க உரிமைகள் போன்றவற்றையும் குழுவினர் விவாதிக்கின்றனர். மேற்கு நேபாளத்தில் குருங் மக்களால் இக்குழு தொடங்கப்பட்டது. ஏனெனில் குருங் ஆண்கள் நேபாளத்தை விட்டு பிரித்தானிய இராணுவத்திலும் (கூர்காக்களின் படை) மற்றும் இந்திய இராணுவத்திலும் (கூர்கா படைப்பிரிவுகள்) சேருவதற்காக செல்வார்கள்.[3] பாட்டு, நடனம் மற்றும் மாலை நேரத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவே முதலில் தாய் குழு தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mothers' groups uplift women and create social awareness in rural parts of Baitadi", kathmandupost.com (in English), பார்க்கப்பட்ட நாள் 2024-02-24{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  2. (in en) Asian Women. Research Center for Asian Women, Sookmyung Women's University. 1997. பக். 128. https://books.google.com/books?id=w53xAAAAMAAJ. 
  3. (in en) Volunteerism in Nepal. National Planning Commission, National Development Volunteers Service. 2002. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-99933-701-3-0. https://books.google.com/books?id=IOrZAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_குழு&oldid=3896346" இலிருந்து மீள்விக்கப்பட்டது