தமிழ் மொழியில் உள்ள பேச்சு வழக்கில் திரிந்த தமிழ்ச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள் காலப்போக்கில் பேச்சு வழக்கில் பொருள் திரிந்து எழுத்துக்கள் திரிந்து உள்ளன. அவற்றின் தொகுப்பு.

காலப்போக்கில் பேச்சு வழக்கில் பொருள் திரிந்த தமிழ்ச் சொற்கள்[தொகு]

சொல் தற்கால பேச்சு வழக்கில் உள்ள பொருள் உண்மையானப் பொருள்
நெஞ்சு மார்பு நெஞ்சாங்குலை, இதயம், இருதயம்
தண்ணீர் நீர்(Water) குளிர்ந்த நீர்(தண்மை+நீர்)
நெய் பசும்பால் நெய்(Ghee) உராய்வு இல்லாமல் இருப்பது. நெய்>நேய்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்). நெய்யின் தன்மை கொண்டது நேய்(நேயம்). Oil.
எண்ணெய் அனைத்து நெய்யையும்(Oil) சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்(Oil). எள்+நெய்=எண்ணெய்.
சமணம் ஜைனம்(Jainism) ஆசீவகம், ஜைனம், சாவகம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்[1][2]

எழுத்துக்கள் திரிந்த தமிழ்ச் சொற்கள்[தொகு]

திரிந்தச் சொல் உண்மையானச் சொல்
பைத்தியம் பித்தியம்

பேச்சு வழக்கில் திரிந்த ஊர்ப்பெயர்கள்[தொகு]

தற்காலத்தில் வழங்கப்படும் ஊரின் பெயர் உண்மையான பெயர் வழங்கப்பட்ட காலம்
திருச்சிராப்பள்ளி/த்ரிச்சி(Trichinopoly) திருச்சிலாப்பள்ளி
கரூர் கருவூர் சங்ககாலம்
ராம்நாட்(Ramnad) இராமநாதபுரம்
டேன்ஜோர்(Tanjore) தஞ்சாவூர், தஞ்சை
சிதம்பரம் சிற்றம்பலம்
ஈரோடு ஈரோடை
அண்ணமங்கலம் அண்ணல் மங்கலம்
பழனி மலை பொதினி மலை சங்ககாலம்
ஸ்ரீரங்கம் திருவரங்கம்(திரு+அரங்கம்)
திருவான்மியூர் திருவாமையூர்
காட்பாடி(Katpadi) காட்டுப்பாடி
காவேரி ஆறு காவிரி ஆறு சங்ககாலம்
கர்நாடகா கருநாடகம்(கரு+நாடு+அகம்)
பெங்களூர்(Banglore) வெங்காலூர் சங்ககாலம்
பெல்லந்தூர் வெல்லந்தூர்
மைசூர்(Mysore) எருமையூர்(மையூர்) சங்ககாலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. சாவகர் அருகர் சமணர் ஆகும்;
    ஆசீ வகரும் அத்தவத் தோரே
    - திவாகர நிகண்டு
  2. சாவகர் அருகர் சமணர் அமணர்
    ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
    - ஐயர் வகை, பிங்கல நிகண்டு