டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு (T. D. Muthukumaraswamy Naidu) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு கடலூர் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  2. 1951/52 Madras State Election Results, Election Commission of India