சுதந்திரம் (இதழ்)
தோற்றம்
சுதந்திரம் 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியராக கே. அருணாசலம் என்பவர் இருந்தார். இது கோட்டோவியம், நகைச்சுவை, துணுக்கு, கதை, கவிதை, கட்டுரை எனப் பல வடிவங்களில் கருத்துகளை ஆக்கங்களாக்கி அதிகமான பக்கங்களில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.