சிவகிரி புலிப்பாணிச் சித்தர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலிப்பாணிச் சித்தர் கோயில் என்பது ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் சுனைக்கு மேல் அமைந்துள்ளது.

இவருக்கு புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குருபூசை கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் புலிப்பாணிச் சித்தருக்கு சிலையுள்ளது. இது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் விநாயகர் சிலையானது வடக்கு நோக்கி புலிப்பாணிச் சித்தருக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்: ஈரோட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளகோவில் செல்லும் சாலையில் சிவகிரி உள்ளது.

சிறப்புத் தகவல்கள்: இங்கு வாராவாரம் செவ்வாய்க்கிழமை மாலை பூஜையும் கூட்டு வழிபாடும் நடைபெறுகின்றன. பெளர்ணமி தோறும் சிறப்புப் பூஜைகளும் சிவாகம முறைப்படி நடத்தப்படுகின்றன. இத்தலம் தனியாருக்குச் சொந்தமானது. இக்கோவில் பராமரிப்பு தனிநபரால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/edition_coimbatore/erode/2013/10/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/article1825053.ece சிவகிரியில் புலிப்பாணி சித்தர் குருபூஜை விழா தினமணி 08 October 2013