சிவகணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகணங்கள்

சிவகணங்கள் என்பவை இந்து தொன்மவியலின் அடிப்படையில் கயிலை மலையில் வசித்து வருகின்ற கணங்களாகும். சிவபெருமான் ஒன்பது யானைகளும், பதினெண் சிவகணங்களும் சூழ இருக்கிறார். [1]

சிவகணங்கள் சிவபெருமானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டனவாகவும், சிவனடியார்களைப் பூலோகத்திலிருந்து கைலாயத்திற்கு அழைத்து செல்வதையும், போர்களின் போது அரக்கர்களுக்கு எதிராக சண்டையிடக்கூடியனவாகவும் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்த படலத்தின் இறுதியில் வந்தி பாட்டியைச் சிவகணங்கள் கயிலைக்கு அழைத்துச் செல்லுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
    றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
    ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
    ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே. - பாடல் எண் : 9

  2. "மண் சுமந்த படலம்!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகணங்கள்&oldid=3654510" இலிருந்து மீள்விக்கப்பட்டது