கிரீடம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புதிய பக்கம்: {{Infobox Film | name = கிரீடம் | image = கிரீடம்.jpg | image Size = 250px | caption = | director ... |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
| followed by = |
| followed by = |
||
}} |
}} |
||
''' |
'''கிரீடம்''' A.L.விஜய் இயக்கத்தில் [[2007]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் . |
||
== கதை == |
== கதை == |
||
13:04, 5 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
கிரீடம் | |
---|---|
இயக்கம் | A.L.விஜய் |
இசை | ஜீ.வி.பிரகாஷ்குமார் |
நடிப்பு | அஜித் குமார் நயன்தாரா ஜெயராம் சுமன் நவ்தீப் பியா நாசர் |
படத்தொகுப்பு | அந்தோனி |
விநியோகம் | ஜங்கரன் இண்டர்நேஷனல் |
வெளியீடு | ஜுலை 20, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிரீடம் A.L.விஜய் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் .
கதை
நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை வேதவாக்காக மதிக்கும் அஜித்தும் அப்படியே இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி எம்.எல்.ஏ தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு டிரான்ஸ்பர் செய்கிறார்.
குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமார் ஆட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரைப் புரட்டி எடுக்கிறார். அஜய்குமாரை அடித்ததன் மூலம் அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் போலீஸ் வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அடிபட்ட புலியான பழைய தாதா அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான். முடிவில் அஜித் தாதாவானாரா? அல்லது காவல்துறை அதிகாரியானாரா என்பதே கிளைமாக்ஸ்.