அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 98: | வரிசை 98: | ||
அங்கையாற் காளாம் அது......................................11 |
அங்கையாற் காளாம் அது......................................11 |
||
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் |
|||
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே |
|||
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர் |
|||
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12 |
|||
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப் |
|||
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர |
|||
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் |
|||
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13 |
|||
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான் |
|||
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர் |
|||
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் |
|||
நீணாகத் தானை நினைந்து......................................14 |
|||
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம் |
|||
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து |
|||
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் |
|||
கென்செய்வான் கொல்லோ இனி..................................15 |
|||
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம் |
|||
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர் |
|||
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக் |
|||
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16 |
|||
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது |
|||
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச் |
|||
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு |
|||
ஆதியாய் நின்ற அரன்.........................................17 |
|||
அரனென்கோ நான்முக னென்கோ அரிய |
|||
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத் |
|||
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை |
|||
யானவனை எம்மானை இன்று....................................18 |
|||
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் |
|||
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர் |
|||
மூவா மதியானை மூவே ழுலகங்கள் |
|||
ஆவானைக் காணும் அறிவு.......................................19 |
|||
அறிவானும் தானே அறிவிப்பான் தானே |
|||
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற |
|||
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம் |
|||
அப்பொருளும் தானே அவன்......................................20 |
|||
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான் |
|||
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே |
|||
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான |
|||
மயனாகி நின்றானும் வந்து.......................................21 |
|||
07:27, 19 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்
காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதி
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை..................................4
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்......................................5
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்.......................................7
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு......................................9
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று...................................10
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது......................................11
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து......................................14
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி..................................15
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்.........................................17
அரனென்கோ நான்முக னென்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யானவனை எம்மானை இன்று....................................18
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.......................................19
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்......................................20
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.......................................21
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )